Monday, July 17, 2017

ரவிக்குமார் கவிதை

 

பகலில் எரிந்துகொண்டிருக்கும் 
தெருவிளக்குபோல்
இவன் நேசம்

நாய்க்குட்டிக்கு வைக்கும் சோற்றை
கோழிகள் தின்றுவிடுகின்றன என்கிறாய் நீ

காக்கை வராததால் 
விரதத்தோடு காத்திருக்கிறேன் என்கிறான் இவன்


2015 ல் எழுதியது

No comments:

Post a Comment