Friday, April 7, 2017

சென்னையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்களா?

சன் டிவியில் நான் பங்கேற்ற விவாதம் 

நான் விவாதத்தில் வலியுறுத்திய சில கருத்துகள்: 

1. வாடகைக்கு விற்பனைக்கு முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காததை முன்னாள் யுஜிசி தலைவர் S. K . தோரட்டும் வேறுசில ஆய்வாளர்களும் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர், twocircles.net என்ற இணைய தளமும் டெல்லியில் ஆய்வுசெய்து பெரும்பாலான ஹவுசிங் சொசைட்டிகளில் ஒரு முஸ்லிம்கூட உறுப்பினர் இல்லை என்பதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

2. பாகுபாடுகளை அடிப்படையாகக்கொண்டது நம் சமூகம், காற்றைப்போல பரவியிருக்கிறது பாகுபாடு.  
தமிழ்நாடு சமயப் பொறைக்கு சான்று அல்ல, சமயக் கொலைக்கு சான்று. அதைத்தான் ரொமிலா தாப்பர், வித்யா தெஹேஜியா முதலான வரலாற்றறிஞர்களின் ஆய்வுகளும், திருப்புடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் காணப்படும் ஓவியங்கள் சிற்பங்களும் உறுதிப்படுத்துகின்றன. 

3. திராவிட இயக்கம் பாகுபாடுகளைக் களைந்து விடவில்லை. ஏற்கனவே இங்கு பாகுபாடுகள் தழைத்துக்கொண்டுள்ளன. 

4. இப்போது மத்தியில் அமைந்திருக்கும் ஆட்சியின் கொடூரத்தை நிகழ்வுகளின் அடிப்படையில் எதிர்த்தால் போதாது, கருத்தியல் ரீதியில் எதிர்க்கவேண்டும். 

5. அரசியல் சட்டத்தை திருத்தாமலேயே பெரும்பான்மை ஆட்சியை பெரும்பான்மைவாத ஆட்சியாக மாற்றமுடியும் என காட்டிவிட்டார்கள். இந்த ஆபத்தை உணரவேண்டும்; 

6. சாதி பெரும்பான்மைவாதமும் மதப்பெரும்பான்மைவாதமும் எதிர் எதிரானவை அல்ல, ஒன்று மற்றதாக மாறிவிடக்கூடியவை . 

7. தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சாதிப் பெரும்பான்மைவாதம் மதப்பெரும்பான்மைவாதத்துக்கு உவப்பானதே

8. முன்னாள் அமைச்சர் சசி தரூர் தற்போது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் தனிநபர் மசோதா 17 வகையான பாகுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது. அவை எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும்.

No comments:

Post a Comment