Tuesday, March 7, 2017

மகளிர் தினத்தில் அம்பேத்கர்

 

மகளிர் உரிமைக்காக சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் அம்பேத்கர். நான்கு ஆண்டுகாலம் போராடியும் இந்து சட்ட மசோதாவை சட்டமாக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் அவர் தனது பதவியைத் துறந்தார். 

தான் பதவி விலகியதற்கான காரணங்களை விளக்கி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்: 

" To leave inequality between class and class, between sex and sex, which is the soul of Hindu Society untouched and to go on passing legislation relating to economic problems is to make a farce of our Constitution and to build a palace on a dung heap." 

என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். அது இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. 

இந்திய அரசியல் வரலாற்றில் மகளிரின் உரிமைகளுக்காகப் பதவி விலகிய அம்பேத்கரை சர்வதேச மகளிர் தினத்தில் நினைவுகூர்வோம்.


No comments:

Post a Comment