Monday, March 6, 2017

ரவிக்குமார் கவிதைகள்

ரவிக்குமார் கவிதைகள்

மொழி தோற்றுப்போகும் என ஒப்புக்கொள்கிறவர்களால் மட்டுமே 
கேட்கமுடியும் 
மௌனத்தின் உரையாடலை

2
நேசம் என்பதொரு சொல்
நேசம் என்பதொரு உணர்வு
நேசம் என்பதொரு மாயை
நேசம் என்பதொரு வர்த்தகப் பெயர்

3
அடைத்துக் கிடக்கும்
வீட்டுக்குள்ளும்
வருகிறது
போகிறது
காற்று

4

கூடடையும் பறவை 
துயரம்
பழக்கப்பட்ட மரம்
இதயம்

No comments:

Post a Comment