Wednesday, May 4, 2016

காயும் புளி



அக்னி நட்சத்திர வெயிலில் வாக்கு சேகரிப்பது எவ்வளவு கடினம் என்பதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். உச்சி வெயிலில் ஓட்டுக் கேட்கும்போது வெயிலின் கொடுமையை உடம்பு உணராமல் இருக்க மனதை அவிழ்த்துவிட்டுவிடுவேன். இன்று 'காயும் புளி 'அதன் கண்ணில் பட்டது. 

வானூர் தொகுதி கிராமங்களில் இன்னும்கூட நிறைய புளிய மரங்கள் இருக்கின்றன. ஆங்காங்கே வீடுகளில் புளியம் பழங்களை குவித்து வைத்துக்கொண்டு உடைத்து கொட்டை நீக்கிக் கொண்டிருந்தார்கள். கொட்டை நீக்கிய பிறகுதான் இப்படி காயவைப்பது நடக்கும். நன்றாக காய்ந்த பிறகு பானைகளில் அடைத்துவைத்தால் அடுத்த கோடை வரை குழம்புக்குக் கவலை இல்லை.   

ஊரில் அப்பா வைத்த புளியமரம் உலுக்குவாரின்றி தானே பழம் உதிர்க்கிறது. விரும்புகிறவர்கள் பறித்துக்கொள்கிறார்கள். அப்பா இல்லாவிட்டாலும் அவரைப்போலவே அவர் வைத்த புளியமரம் ஊருக்கு உதவிக்கொண்டிருக்கிறது. 

No comments:

Post a Comment