Friday, January 15, 2016

இரவுப் பாடசாலை மாணவர்களுக்கு உதவுங்கள்!


விழுப்புரம் மாவட்டம் கடப்பேரிகுப்பம் கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து இரவுப் பாடசாலை ஒன்றை நடத்துகின்றனர். தினமும் ஐம்பது மாணவர்கள் அதில் படிக்கின்றனர். 

ஒரு சமூகநலக் கூடம் போல காட்சியளிக்கும் அந்தப் பாடசாலை தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. அந்தப் பாடசாலையில் இதற்குமுன் படித்து பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி ஆசிரியராகவும் வேலைக்குப் போனவர்கள் இப்போது அங்கே இரவு நேரத்தில் வகுப்பு எடுக்கிறார்கள். 

அந்த இரவுப் பாடசாலை மாணவர்களுக்கு பின்வரும் உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன: 

1. மாணவர்கள் அமர்ந்து படிக்க பெஞ்ச், நாற்காலிகள்

2.அவர்களுக்கு ஒரு சிறு நூலகம்

3. இரவுப் பாடசாலை மாணவர்களுக்குக் கற்பிக்க கணினி 

4. மின் தடை அடிக்கடி ஏற்படுவதால் ஒரு இன்வெர்ட்டர் 

உதவிசெய்ய விரும்புவோர் தொடர்புகொள்ள: 

ஏழுமலை, ஆசிரியர் 97-90-030941

No comments:

Post a Comment