Monday, January 4, 2016

ஒரு காஷ்மீரிக் கவிதை

கைவிடப்பட்ட சடலம்

- பஷீர் அத்தர்

தமிழில்: ரவிக்குமார்

அவன் கைகளில் இட்ட மருதாணி இன்னும் மங்கவில்லை
 முகத்தில் தாடி முழுதுமாய் முளைக்கவில்லை

 ........... சகோதரிகள் தேடிக்கொண்டிருக்கலாம்
அம்மா அவனுக்காகக் கதவருகில் காத்திருக்கலாம்
வயதான தந்தை பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருக்கலாம்
கருணையே இல்லாமல் கைவிடப்பட்டுக் கிடக்கிறது 
அந்த சடலம்

 சில நாட்கள் சென்றபின் உருது பத்திரிகை ஒன்றில் செய்தி வந்தது
 ‘ நாங்கள்தான் கொன்றோம், அவன் ஒரு ஆள்காட்டி,  இயக்கத்தை எதிர்ப்பவன், துரோகி’
அதைப் படித்த ஒருவர் சொன்னார் : ‘அவன் ஒரு போராளி ,நாட்டின் எதிரி , எதிரிகளின் கையாள் ‘
 இன்னொருத்தர் முணுமுணுத்தார் : ‘அவன் போராளியும் அல்ல 
கையாளும் அல்ல
 நேசம் நிறைந்த காஷ்மீரின் புத்திரன்’
 
கொடூரமாகக் கொல்லப்பட்ட இளைஞன்
 கருணையின்றிக் கைவிடப்பட்ட அவன் சடலம்.

No comments:

Post a Comment