Monday, January 25, 2016

கலாச்சார மூலதனத்தைத் திரட்டுங்கள் - ரவிக்குமார்

 

நேற்று (25.1.2016) மதுரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் படிப்பு வட்டம் துவக்க நிகழ்வு. ஆய்வாளர்கள் பழனிக்குமார், அ.செகன்னாதன், பேராசிரியர் ஜே.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோரின் முயற்சியால் இந்தப் படிப்புவட்டம் உருவாகியுள்ளது. 

படிப்பு வட்டத்தைத் துவக்கிவைத்து நான் ஆற்றிய உரையின் சில அம்சங்கள்: 

1. ரோஹித் வெமுலாவின் மரணம் உருவாக்கிய தாக்கத்தை அதன் முன்னர் 2008 ல் நிகழ்ந்த செந்தில்குமாரின் மரணம் உருவாக்கவில்லை. தற்போது விழுப்புரம் அருகில் நிகழ்ந்துள்ள மூன்று மாணவிகளின் மரணமும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரோஹித்தின் மரணத்துக்கு மதவாத சக்திகளின் தலையீடு காரணமாக அமைந்தது ஆனால் செந்தில்குமாரின் மரணம் சாதிய பாகுபாட்டால் மட்டும் நிகழ்ந்தது. விழுப்பிரம் மாணவிகள் தற்கொலை கல்வி பண்டமாக்கப்படுவதன் விளைவு. 

2. மதவாத எதிர்ப்பு அரசியல் உருவாக்கிவைத்திருக்கும் கலாச்சார மூலதனமே ரோஹித்தின் மரணத்தை மலையைவிட கனமானதாக மாற்றியிருக்கிறது. சாதி எதிர்ப்பு அரசியலோ, கல்வி வணிகமயமாக்கப்படுவதற்கு எதிரான அரசியலோ அந்த அளவுக்குக் கலாச்சார மூலதனத்தை உருவாக்கவில்லை என்பதால்தான் அந்த மரணங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியவில்லை. 

3. . அம்பேத்கரை வாசிப்பது கலாச்சார மூலதனத்தை உருவாக்கும் ஒரு செயல்பாடாகவும் இருக்கிறது. அந்தப் புரிதலோடு இந்த படிப்பு வட்டத்தை நடத்துங்கள். 

4. அம்பேத்கரின் முக்கியமான பிரதிகளை (key texts)அடையாளம் காண்பது மட்டுமின்றி முக்கியமான கருத்தாக்கங்களையும் (key concepts) அடையாளம் காணவேண்டும். 

5. அம்பேத்கர் தனது ஆய்வுகளுக்கு உலக அளவிலான சிந்தனைகளையெல்லாம் பயன்படுத்தினார். இந்தியாவில் இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சிந்தனைகளை இந்தியாவுக்குள் மட்டும் தேடிக்கொண்டிருக்கக்கூடாது. இதுதான் நாம் ச்ம்பேத்கரிடம் கற்கும் முதல் பாடமாக இருக்கவேண்டும். 

6. communal majority / political majority என்ற வேறுபாட்டை அவர் சுட்டிக்காட்டினார். அதுவொரு முக்கியமான concept. அதை சாதிப் பெரும்பான்மைவாதம் என விரிவுபடுத்தி பிராந்தியக் கட்சிகளின் செயல்பாடுகளை விளக்க நான் கையாண்டுவருகிறேன். இதுபோல இன்னும் பல கருத்தாக்கங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்தவேண்டும்; அவற்றைப் பொதுவெளியில் ஏற்கும்படிச் செய்யவேண்டும். 

No comments:

Post a Comment