Thursday, January 14, 2016

தை முதல் நாளில் உறுதியேற்போம்


சாதி ஒழிப்பில் நம்பிக்கைகொண்டு சமத்துவத்தை விரும்பும் நண்பர்களே! சாதி இழிவோடு  பிணைக்கப்பட்ட பறை அடிப்பதை இனி ஆதரிக்கமாட்டோம் என உறுதியெடுத்துக்கொள்ளுங்கள். 

பறை என்பது உயர்ந்த கலை என்று கூறி மீண்டும் நவீன தீண்டாமையை விதைக்கும் சதிக்கு துணைபோகாதீர்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திதாசப் பண்டிதர் பறைக்கும் பூர்வ பௌத்தர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை விளக்கியுள்ளார். அதை மனதில் கொள்ளுங்கள். 

தமிழக கிராமங்கள் அனைத்தையும் இழிதொழில் ஒழிக்கப்பட்ட கிராமங்களாக்க சபதம் மேற்கொள்ளுங்கள். 

தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்வதை அரசாங்கம் கைவிடவேண்டும் என வலியுறுத்துங்கள்.

No comments:

Post a Comment