Wednesday, November 4, 2015

ஈழத்துத் தமிழறிஞர் ஆ.வேலுப்பிள்ளை சிறப்பிதழ்



ஈழத்தைச் சேர்ந்த தமிழறிஞர் திரு ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் நவம்பர் 2 ஆம் நாள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள். 

 தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், இலக்கணம்,கல்வெட்டியல்,தொல்லியல்,சமய வரலாறு எனப் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தவர். தமிழியல் ஆய்வுகளில் அவரது பங்கு மகத்தானது.அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மணற்கேணி 32 ஆவது இதழ் அறிஞர் ஆ.வேலுப்பிள்ளை சிறப்பிதழாக 2015 டிசம்பர் மாதத்தில்  வெளிவரவுள்ளது. அதில்  கட்டுரை  எழுத விரும்புவோர் தமிழியலுக்கான அவரது பங்களிப்புகள் குறித்தும் அவரோடு, அவரது படைப்புகளோடு தங்களுக்கிருந்த உறவு குறித்தும்  எழுதலாம். 

500 முதல் 750 சொற்கள் வரையிலும் உங்கள் கட்டுரை அமையலாம். யூனிகோடு அல்லது பாமினி  எழுத்துருவில்  கட்டுரையை தட்டச்சு செய்து manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.11.2015 க்குள் அனுப்புமாறு வேண்டுகிறேன். 

அன்புடன்
ரவிக்குமார்
ஆசிரியர்,மணற்கேணி

No comments:

Post a Comment