Thursday, September 10, 2015

கூனல் பிறை: உரைநடைக் கவிதைகள்- இந்திரா பார்த்தசாரதி



ஆங்கிலத்தில் ‘உரைநடைக் கவிதைகள்’ (prose poems) என்ற மரபு உண்டு. ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய ‘A city night piece’ ம், சார்ல்ஸ் லாம்ப் எழுதிய ‘Dream children’ம் இந்த இலக்கிய வரையறைக்குள் அடங்கும். தமிழில் இந்த மரபின் வரவு தேன்மொழியால் துவக்கப்பட்டிருக்கிறது.

தேன்மொழியின் கதைகள் அனைத்தும் கவிதையாக எழுதப்பட்டிருக்க வேண்டியவை. காரணம், அவர் எழுத்தினின்றும், இயற்கையையும், கதை மாந்தர்களையும், நிகழ்வுகளையும் பிரித்துப் பார்க்க இயலாது. மூன்றும் ஒன்றோடு ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. 

’ஒரு சின்ஞ்சிறிய மலர் கூட என்னிடம் கரைக் கடந்த உணர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறன’ என்றான் வேர்ட்ஸ்வொர்த். அது போல் தேன்மொழியின் கதைகளில் நாணற்புதர்கள், ஊமத்தம் பூக்கள், வாடாமல்லி மலர்கள், பாம்புகள் அனைத்துமே வாசகனிடம் இயல்பாக, அவைகள் அஃறிணைப்பொருள்கள் என்ற எண்ணம் ஏற்படாதபடி உரையாடுகின்றன. 

’நம்புவதா, நம்பாமாமிலிருப்பதா’ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கும் ,புதுமைப்பித்தன் வகைப்படுத்திய ‘கயிற்றரவு’ நிகழ்வுகளை, மிக அற்புதமாகக் கையாளுகிறார் தேன்மொழி. கதையின் கவிதைப் பரிமாணத்துக்கு இது கூடுதலான வடிவத்தைத் தருகிறது. 

வறுமை, சமூக ஏற்றத் தாழ்வுகள் போன்ற பி5ரச்னைகளை இலக்கியத்தில், நம்மை நேரடியாக வந்துத் தாக்கும் யதார்த்தத்  துடன் சித்திரிப்பது ஒரு வகை. உருவக்க் குறியீட்டு முறையில் கவிதை நயத்துடன் சொல்வது இன்னொரு வகை. சத்யஜித் ரே
படங்களில் நாம் காணும் கவிதை உத்தி தேன்மொழிக் கதைகளிலும் நாம் காண முடிகின்றது.

தேன்மொழிக்கு என் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment