Saturday, September 12, 2015

புரட்சிப் பாடகர் கத்தர் தேர்தலில் போட்டியிடவேண்டும்!



வாரங்கல் பாராளுமன்றத் தொகுதிக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் புரட்சிப் பாடகர் கத்தரை நிறுத்துவதென தெலுங்கானா மாநில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. கத்தர் இதற்கு ஒப்புதல் தருவாரா எனத் தெரியவில்லை. வெற்றி தோல்வியைப்பற்றிக் கவலைப்படாமல் கத்தர் இதற்கு ஒப்புக்கொள்ளவேண்டும். 

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாராளுமன்ற முறைக்கு வெளியிலிருந்து அதை விமர்சித்தவர்கள் தமது நிலைபாடு பற்றி ஆய்வுசெய்யவேண்டும். 

இந்தியப் பாராளுமன்றத் தேர்தல்முறை, ஜனநாயகம் ஆகியவற்றை உலகமயமாதல் உச்சத்திலிருக்கும் இந்தத் தருணத்தில் மீளாய்வுசெய்யவேண்டியது இடதுசாரிகளின் உடனடிக் கடமையாகும். 

சர்வாதிகார அச்சுறுத்தல் உலகமெங்கும் அதிகரித்துவருகிறது. அதன் அடையாளத்தை இந்தியாவிலும் பார்க்கிறோம். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான கருத்தியலை உருவாக்க திறந்த மனத்துடனான உரையாடல் அவசியம். அதை கம்யூனிஸ்ட் கட்சிகள் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளமாக கத்தருக்கான அழைப்பைப் பார்க்கலாமா? 

http://www.siasat.com/news/cpi-m-asks-gaddar-decide-warangal-ls-bypoll-833007/




No comments:

Post a Comment