Saturday, July 18, 2015

நிக்கனோர் பர்ரா கவிதைகள்


தமிழில்: ரவிக்குமார் 
~~~~~~~~~~~
1.

தீப்பற்றிக்கொண்டால் மின்தூக்கிகளைப் பயன்படுத்தாதீர்கள்
படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்
வேறு அறிவிப்பு செய்யப்படாதவரை

புகை பிடிக்கக்கூடாது
குப்பை போடக்கூடாது
மலங்கழிக்கக்கூடாது
வானொலிகேட்கக்கூடாது
வேறு அறிவிப்பு செய்யப்படாதவரை

ரயில் ஸ்டேஷனில் நிற்கும் நேரம் தவிர
ஒவ்வொருமுறை பயன்படுத்தியதும் டாய்லெட்டில் தண்ணீர்விடுங்கள்
அடுத்துவரும் பயணியைப்பற்றி யோசியுங்கள்

கிறித்தவ படைவீரர்களே முன்னேறுங்கள்
உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்
நாம் இழப்பதற்கு எதுவுமில்லை உயிரைத்தவிர
புகழ் உரித்தாகட்டும் தந்தைக்கு 
புகழ் உரித்தாகட்டும் தனயனுக்கு
புனித ஆவிக்கு 
வேறு அறிவிப்பு செய்யப்படாதவரை

கூடவே 
தெள்ளத் தெளிவான பின்வரும் உண்மைகளும் இருக்கின்றன 
எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டனர்
படைத்தவன் அவர்களுக்கு பிரிக்கமுடியாத சில உரிமைகளைத் தந்திருக்கிறான் 
அவற்றுள் சில: 
உயிர், சுதந்திரம், சந்தோஷமான வாழ்க்கை 
இறுதியாக - 
இரண்டும் இரண்டும் நான்கு
வேறு அறிவிப்பு செய்யப்படாதவரை 

2.

வதைப்பதென்றால் ரத்தம் சிந்தவைக்க வேண்டுமென்பது அவசியமில்லை
உதாரணத்துக்கு 
ஒரு அறிவுஜீவியைப் பிடியுங்கள்
அவரது கண்ணாடியை
ஒளித்துவைத்துவிடுங்கள் 

No comments:

Post a Comment