Monday, April 6, 2015

ஆம்லேட் சாப்பிட்டால் ஆறுமாத சிறை என சட்டம் வருமோ?


மாட்டிறைச்சி உண்பதைத் தடைசெய்து மகராஷ்டிர அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது நேற்று விசாரணைக்கு வந்தபோது ' மாட்டிறைச்சிக்கு மட்டும் தடை விதித்தது ஏன்? ஆட்டிறைச்சியை ஏன் தடைசெய்யவில்லை என நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். " எல்லாவிதமான இறைச்சி உணவுகளுக்கும் அரசு தடைவிதிக்கவுள்ளது. அதன் முதல் கட்டமாக மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். 

மாட்டிறைச்சி தடையோடு நிற்கப்போவதில்லை. சைவ உணவு மட்டும்தான் சாப்பிடவேண்டும் என சட்டம் போடப்போகிறார்கள் என்பதைத்தான் மகராஷ்டிர அரசு சழக்கறிஞரின் பதில் சுட்டிக்காட்டுகிறது. மாட்டிறைச்சி தடை சட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டுவரவேண்டும் என ஏற்கனவே மத்திய  அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாக செய்தி வெளியானது. 'ஆம்லேட் சாப்பிட்டவருக்கு ஆறுமாத சிறைதண்டனை' என செய்தி வெளியாகும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறதா? 

No comments:

Post a Comment