Monday, February 9, 2015

டெல்லி தேர்தல்:

 உதிரத் தொடங்கும் ஊடக மாயை
=============

இன்னும் சில மணி நேரத்தில் டெல்லி தேர்தல் முடிவு தெளிவாகிவிடும். வாக்கெடுப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆம் ஆத்மியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அது 40 இடங்களுக்கும் மேல் கைப்பற்றும் என்பது எனது கணிப்பு. 

இந்தத் தேர்தல் முடிவை மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதான வாக்கெடுப்பாகக் கருத முடியுமா? என்று சிலர் கேட்கின்றனர். அப்படித்தான் கருதவேண்டும். இந்தத் தேர்தலில் பாஜக தனது சக்தி அனைத்தையும் பயன்படுத்தியிருக்கிறது. போதாக்குறைக்கு ஒபாமா வருகை வேறு! அப்படியிருந்தும் அக்கட்சி தோற்றால் அதற்கு என்ன விளக்கம் சொல்வார்கள்? 

சில கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருப்பதுபோல 20 இடங்களுக்கும் குறைவாக பாஜக பெற்றால் அது தனது அணுகுமுறையை முற்றாக மாற்றிக்கொள்ளவேண்டும் என மக்கள் தெரிவித்திருப்பதாகவே பொருள்படும். 

டெல்லி தேர்தல் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதான வாக்கெடுப்பு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரைப்பற்றி கட்டி எழுப்பப்பட்டுள்ள ஊடக மாயைகள் உதிரத் தொடங்குவதன் அடையாளம்! 

No comments:

Post a Comment