Thursday, January 22, 2015

பேராசிரியர் இரா.இளவரசு மறைந்தார் - ரவிக்குமார்

 

தமிழ் அறிஞரும் தமிழியக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் இரா. இளவரசு (1939-2015) இன்று சென்னை மருத்துவமனை ஒன்றில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலிவுற்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார். பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டும் பதிப்புகளைச் செய்தும் பெரும்பணியாற்றியவர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்தநாளைக் காணும் முன் மறைந்துவிட்டார். 

தமிழ்ப் பணியில் மட்டுமின்றி ஆசிரியர் இயக்கப் பணிகளிலும் முன்னின்றவர். அதனால் சிறைசென்றவர்.தமிழ்வழிக் கல்விக்காகவும், ஈழத் தமிழருக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர். 

பேராசிரியர் இரா.இளவரசு அவர்களின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. பேராசிரியருக்கு எனது அஞ்சலி! 

No comments:

Post a Comment