Thursday, December 18, 2014

மறுமதமாற்றம்: மதவாதிகளும் சாதிவாதிகளும் - ரவிக்குமார்


"கிறித்தவத்திலிருந்தோ இஸ்லாத்திலிருந்தோ இந்துமதத்துக்கு மீண்டும் வருபவர்கள் தாம் விரும்புகிற சாதியைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்என விஸ்வ இந்து பரிஷத்தின்செயலாளர் கூறியிருக்கிறார்.

"
மறுமதமாற்றம் செய்யப்படுகிறவர்களின் பரம்பரைநம்பிக்கைபண்பாடு ஆகியவற்றை விஎச்பி ஆராயும்எனக் கூறியிருக்கும்விஎச்பி பொறுப்பாளர் வெங்கடேஷ் அப்தேவ் " 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறுமதமார்றம் என்ற பெயரில் பீதியூட்டிக்கொண்டிருக்கும் இந்துத்துவவாதிகளிடம், "மறுமதமாற்றம் செய்பவர்களை எந்த சாதியில் அடைப்பீர்கள்?" என தலித் அமைப்புகள் கேள்வி எழுப்பினஅதற்குப்பதிலளிக்கும் விதமாகவே விஎச்பியின் இந்த அறிவிப்புசெய்யப்பட்டுள்ளது.

மதமாற்றமும் சேரி என்னும் சிறையும்:

கிராமப் புறங்களில் இந்து மதத்தின் தீண்டாமை உள்ளிட்டக்கொடுமைகளிலிருந்து தப்பிக்க கிறித்தவத்தைத் தழுவியவர்கள்பிறசாதிக் கிறித்தவர்கள் வாழும் குடியிருப்புகளுக்குச் சென்றுஅங்கே வீடுகட்டிக்கொண்டு வாழமுடிவதில்லைஏற்கனவேஅவர்கள் வாழ்ந்த சேரிகளில் ஒரு தனித்த பிரிவாக வாழ்வதுஅல்லது சேரியை ஒட்டிய பகுதியில் தெருவைஅமைத்துக்கொள்வது என்ற நிலைதான் தமிழ்நாட்டில் கடந்தமூன்று  நான்கு நூற்றாண்டுகளாக உள்ளதுஇந்தியாவின் பிற பகுதிகளிலும்கூட இதே நிலைதான். 

சாதி என்பது அருவமான கருத்தியல் எல்லைகளை மட்டுமின்றிஸ்தூலமான நிலவியல் எல்லைகளையும் கொண்டிருக்கிறதுஅருவமான எல்லைகளைக் கடந்தாலும்கூட ஸ்தூலமானஎல்லைகளைக் கடப்பதற்கு சாதியவாதிகள் அனுமதிப்பதில்லை.

சாதியின் செயல்பாடு நுட்பமானதுநிலவியல் எல்லைகள்நெகிழ்வாயிருக்கும் நகர்ப்புறச் சூழலில் கருத்தியல்எல்லைகளை வலுவாக்குவதுகருத்தியல் எல்லைகள்கடக்கப்படும் இடங்களில் நிலவியல் எல்லைகளைத்தாண்டமுடியாமல் செய்வது - என இரட்டைத் தன்மையோடுஅது செயல்படுகிறது.

மதமாற்றமோ மறுமதமாற்றமோ இந்த எல்லைகளை முற்றாகஅழிப்பதில்லைஎனவே விஎச்பி சொல்வதுபோல மறுமதமாற்றம் செய்யப்படுபவர் தான் விரும்பிய சாதியைத்தேர்ந்தெடுத்துக்கொண்டு கருத்தியல்பண்பாட்டுஎல்லைகளைக் கடக்க முயன்றாலும் அவர் ஒருபோதும் சாதியின் நிலவியல் எல்லைகளைக் கடப்பது சாத்தியமில்லை.

ஆணவக் கொலைகளுக்குப் புதிய பலிகளா?

தலித் இளைஞர்கள் பிற சாதிப் பெண்களைக் காதலித்ததிருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்துக்காக நாடெங்கும்ஆயிரக் கணக்கில் ஆணவக் கொலை செய்யப்படுகிறார்கள்அதை இந்துத்துவ அமைப்புகள் கண்டிப்பதில்லைஇன்னும்சொல்லப்போனால் அத்தகைய சாதிவெறியைத் தூண்டிவிட்டுக்குளிர்காய்கின்றன

இந்தச் சூழலில் மகராஷ்டிர மாநிலக் கிராமம் ஒன்றில் தலித்கிறித்தவர் ஒருவர் மீண்டும் இந்துவாகி தன்னை மராத்தாசாதியில் இணைத்துக்கொள்வதாக வைத்துக்கொள்வோம்அல்லது தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றில் தலித் கிறித்தவக்குடும்பம் ஒன்று இந்து மதத்துக்குத் திரும்பி தம்மைநாடாராகவோமுக்குலத்தோராகவோவன்னியராகவோஉடையாராகவோ சொல்லிக்கொள்வதாகவைத்துக்கொள்வோம்அதை அங்கு இருக்கும் அந்தச்சாதியினர் ஏற்பார்களாஅப்படிச் சொன்னால் அங்கு அவர்களதுகதி என்னாகும் என்பதை எண்ணிப்பாருங்கள்கலப்புத்திருமணத்தையே ஒப்புக்கொள்ளாத ஆணவக்கொலையாளிகளுக்கு அவர்கள் இரையாவதைத்தவிர வேறுவழிஇருக்கிறதா? இந்துத்துவவாதிகளின் விருப்பம் அவர்களை சாதிவெறியர்களுக்குப் பலியிடுவதுதானா? விஎச்பி என்ற அமைப்பு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் கட்டளைப் பிறப்பிக்கும் வலிமைகொண்டதா? அத்தகைய அதிகாரம் எந்தவொரு இந்துத்துவ அமைப்புக்காவது இருக்கிறதா?


மதமாற்றம் என்பது தலித் பிரச்சனை மட்டும்தானா?

இந்து மதத்திலிருந்து கிறித்தவத்தையோ இஸ்லாத்தையோதழுவியவர்கள் அனைவரும் தீண்டாத வகுப்பினர் அல்லபல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் மதம்மாறியிருக்கிறார்கள்ஆனால்மறுமதமார்றம் தொடர்பான இப்போதைய விவாதம் முழுக்க தலித்துகளையே மையமிட்டுநடத்தப்படுகிறதுஇந்துத்துவ அமைப்புகள் தலித்துகளைக்குறிவைத்து மறுமதமாற்றம் செய்வதால்தான் இந்த நிலைஏன்அவர்கள் வேறு சாதியைச் சேர்ந்தவர்களை மறுமதமாற்றம்செய்ய முற்படவில்லைஏனெனில்வேறு சாதிகளிலிருந்துகிறித்தவத்துக்குச் சென்றவர்கள் இரண்டுவிதமானஅனுகூலங்களை அனுபவிக்கிறார்கள்சமூகத் தளத்தில் சாதிவழங்கும் ஆதிக்கத்தையும்அரசியல்அரசாங்க  தளத்தில்சிறுபான்மை மதத்துக்கான சலுகைகளையும் அவர்கள் ஒருசேரஅனுபவிக்கிறார்கள்அந்த வசதிகளை விட்டுவிட்டு மீண்டும்இந்துமதத்துக்குத் திரும்பவேண்டிய தேவை அவர்களுக்குஇல்லை

இந்துத்துவவாதிகள் மதவாதிகளாக மட்டுமின்றிசாதியவாதிகளாகவும் இருப்பதால் அவர்கள் சாதிக்கிறித்தவர்களோடு சமரசம் செய்துகொள்கிறார்கள்எனவேதான்தலித் கிறித்தவர்களை,தலித் முஸ்லிம்களை மட்டும் அவர்கள்குறிவைத்து செயல்படுகிறார்கள். 

இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் செய்யவேண்டியது என்ன?

இந்துத்துவவாதிகளின் திட்டம் மறுமதமாற்றம் செய்துஇந்தியாவிலிருக்கும் இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள்அனைவரையும் இந்துக்களாக்கிவிடுவதல்லஅப்படி அவர்கள் விரும்பினாலும் அது சாத்தியமில்லை. இந்தியாவில் மதமாற்றத்தைத் தடைசெய்து சட்டம் இயற்றவேண்டும்என்பதுதான் அவர்களது நோக்கம்அதன்பிறகு சிறுபான்மைமதத்தவரை அச்சுறுத்திப் பணிய வைத்துவிடலாம் என அவர்கள்நினைக்கின்றனர்அதற்காகவே இந்த மறுமதமாற்றம் என்னும்நாடகம்.

இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் சிறுபான்மை மதங்களில்தலைவிரித்தாடும் சாதிவெறியையும் கண்டிக்கவேண்டும்அப்படிக் கண்டிக்காவிட்டால் மதவெறிதான் மோசம் சாதிவெறிமோசமில்லை எனச் சொல்வதாகவே அது பொருள்படும்சிறுபான்மை மதங்களில் சமத்துவத்தைஜனநாயகத்தைக்கோராமல் இந்துத்துவத்தை மட்டும் எதிர்த்தால் வாக்குவங்கிஅரசியல் என்ற அவப்பெயருக்கு ஆளாக நேரிடும்.

இந்துத்துவ மதவெறியும் சிறுபான்மை மதங்களின் சாதிய பாகுபாடும்:

இந்துத்துவ மதவெறி எனப் பேசும்போது இந்து மதத்தில் நிலவும் சாதி வெறியை நாம் மறந்துவிடமுடியாது. அதுமட்டுமல்லாது அது பெரும்பான்மை மதவெறியாக இருக்கிறது என்ற அம்சத்தையும் மனதில் கொள்ளவேண்டும். அதற்கு இணையான ஆபத்தாக சிறுபான்மை மதங்களில் நிலவும் சாதிய பாகுபாட்டைப் பார்க்க முடியாது . அதே நேரத்தில் அந்த சாதிய பாகுபாடுகளைக் கண்டும் காணாமல் போய்விடுவதும் முறையல்ல. 

தேசமோ மதமோ பிறரின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது தம்மை ஒருங்கு திரட்டிக்கொள்ள தமது உறுப்பினர்களுக்கு ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்துவது வழமை. சமத்துவத்தை வழங்க முற்படுவது இயல்பு. அதுபோல இந்தியாவில் பெரும்பான்மை மதவாதத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் இந்த நேரத்திலாவது சிறுபான்மை மதத்தவர் தமது மதங்களைச் சார்ந்த அனைவரையும் சமத்துவத்தோடு நடத்துவது பற்றி சிந்திக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் இந்துத்துவ எதிர்ப்பு என்பதன் பின்னால் தமது சமத்துவமற்றப் போக்கை மூடிமறைத்துக்கொள்ள முயலக்கூடாது.  


சிறுபான்மை மதங்களின் சாதிய பாகுபாட்டை மட்டும் பேசுவதுஇந்துத்துவத்துக்கு ஆதரவாகிவிடும்இந்துத்துவத்தை மட்டும்எதிர்ப்பது சிறுபான்மை மதங்களில் ஆதிக்கம் செலுத்தும்சாதிவெறியர்களை ஊக்குவிப்பதாகிவிடும்எனவே நமதுபோராட்டம் ஒருபுறம் இந்துத்துவவாதிகளின் மதவெறியைஎதிர்ப்பதாகவும் இன்னொருபுறம் சிறுபான்மைமதங்களிலிருக்கும் சாதிவெறியை எதிர்ப்பதாகவும்இருமுனைகொண்டதாக இருக்கவேண்டும்ஒன்றுக்குஇன்னொன்றைப் பலியிடுவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தீங்காகவே முடியும்.

No comments:

Post a Comment