Saturday, November 8, 2014

விபச்சாரத்தை சட்டபூர்வமானதாக்கலாமா?

விபச்சாரத்தை சட்டபூர்வமாதாக்குவது குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவி லலிதா குமாரமங்கலம் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அது பெண்களின் சம உரிமையை உறுதி செய்திருக்கும் ஐநா சபையின் மனித உரிமை பிரகடனத்துக்கு எதிரானது. பாலின சமத்துவம் இல்லாத இந்தியா போன்றதொரு நாட்டில் விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்களை பாதிக்கப்பட்டவர்கள்( victims) என்றே பார்க்கவேண்டும். பாலியல் தொழிலில் உள்ளவர்களில்
99% பேர் அதில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள்தான். ஒருபுறம் பொது இடங்களில் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதைக்கூட குற்றம் எனச்சொல்லி வன்முறையை ஏவுவது இன்னொருபுறம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் என்பது- இவை இரண்டுமே பெண்களுக்கு எதிரானவைதான். பெண் என்பவள் ஒன்று குடும்பம் என்ற அமைப்புக்குள் ஆணின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் அல்லது விபச்சார விடுதியில் அதைச் செய்யவேண்டும் என்பது கீழ்த்தரமான நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சிந்தனை தவிர வேறில்லை. 

No comments:

Post a Comment