Wednesday, November 26, 2014

ரவிக்குமார் கவிதை



நீண்டகாலம் வாழ்ந்துவிட்டதுபோல் தோன்றுகிறது 
இது எனக்கு மட்டும்தானா? அஞ்சலட்டைகளின் காலத்திலிருந்து 
மின்னஞ்சலின் காலத்துக்கு வந்துசேர்ந்த 
எல்லோருக்குள்ளும் எழும் உணர்வா? 

ஒரு நாளிலிருந்து இன்னொரு நாளுக்குப் போகலாம்
ஒரு வருடத்திலிருந்து இன்னொரு வருடத்துக்கும்கூட வந்துசேரலாம்
ஒரு நூற்றாண்டிலிருந்து இன்னொரு நூற்றாண்டுக்கு வந்தவர்களும் உண்டு
நானோ
ஒரு ஆயிரத்திலிருந்து இன்னொரு ஆயிரத்துக்கு வந்தவன்

உட்கார மண்ணோ
ஊன்றிக்கொள்ள நம்பிக்கையோ
தஞ்சம்புக தத்துவமோ இல்லை

களைப்பாயிருக்கிறது
கல்லறையேதும் காலியாக இருக்கிறதா?

No comments:

Post a Comment