Friday, November 21, 2014

புதிய வகை தீண்டாமையை எதிர்க்க புதிய போராட்ட களங்களை உருவாக்குவோம்!



( மராட்டிய மாநிலத்தில் கடந்த அக்டோபர் 20 ஆம் நாள் மூன்று தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று (21.11.2014) காலை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ரவிக்குமார் ஆற்றிய சிறப்புரையின் சுருக்கம்) 
============ 

தோழர்களே! 
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மண்ணில், தலித் பேந்தர்கள் உருவெடுத்த மாநிலத்தில் இப்போது தலித்துகள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது. அம்டோபர் மாதம் இருபதாம் தேதி ஒரே குடிம்பத்தைச் சேர்ந்த மூன்றுபேரைப் படுகொலை செய்திருக்கிறார்கள். அதுவும் மிகக் குரூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி ஊரெங்கும் வீசியிருக்கிறார்கள். கடந்த ஆண்டிலும் இதேபோல மூன்று இளைஞர்கள் வெட்டி வீடசப்பட்டனர். இந்தப் படுகொலையைச் செய்த வெறியர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பி அங்கே தண்ணீர் இருக்கிறதா இல்லையா எமன்று கண்டுபிடிப்பவர்களுக்கு இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களைக் கண்டுபிசடிக்க முடியவில்லை. இயுதான் இந்தியாவிலிருக்கும் சாதிவெறியின் சாதனை. 

பொருளாதாரத்தில் ஒரு சதவீதம் இரண்டு சதவீதம் வளர்வதற்கே இந்தியா திணறிக்கொண்டிருக்கிறது. ஆனால் தலித்துகளின் மீதான வன்கொடுமைகள் மட்டும் பதினொரு சதவீதம் வளர்ந்திருக்கிறது. 
தமிழ்நாட்டிலிருக்கும் சில கட்சிகளைப்போல விடுதலைச் சிறுத்தைகள் சாதி சங்கமாக இருந்து கட்சியாக மாற்றப்பட்ட இயக்கமல்ல. இது எல்லோருடைய உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிற கட்சி. தமிழ் இனத்துக்காக மொழிக்காக தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஈழத் தமிழர்களுக்காக விசிக வைப்போல குரல் கொடுத்த போராசடிய ஒரு கட்சி இங்கே வேறு எதுவும் கிடையாது. நாம் எல்லோரையும் ஒன்றாகக் கருதுகிறோம். எல்லா பிரச்சனைகளையும் நம் பிரச்சனைகளாகப் பார்க்கின்றோம். ஆனால் மற்ற கட்சிகள் அப்படிப் பார்க்கிறார்களா? இப்போது தர்மபுரியில் பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் இறந்துபோனதற்காக முந்திக்கொண்டு அறிக்கை விடுபவர்கள் இளவரசன் கொல்லப்பட்டபோது தலித் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டபோது ஏன் மௌனமாக இருந்தார்கள்? ஈழத் தமிழர் பிரச்சனையில் போராட வருகிறவர்கள் இங்குள்ள தலித்துகள் தாக்கப்படும்போது ஏன் காணாமல் போய்விடுகிறார்கள்? 

தலித் மக்களுடைய பிரச்சனை மற்ற பிரச்சனைகளைப் போன்றதல்ல. ஒருவன் டீ குடிக்க வேண்டுமென்றால் டீயின் விலையான எட்டு ரூபாயையோ பத்து ரூபாயையோ கொடுத்தால் போதும் ஆனால் தாழ்த்தப்பட்ட சமுஇகத்தைச் சேர்ந்த ஒருவன் அந்த ரூபாயோடு தனது சுயமரியாதையையும் விலையாகக் கொடுக்கவேண்டும். ஒரு மாணவன் பள்ளியிலோ கல்லூரியிலோ பாடங்களை படித்தாலே போதும் சணறிதழ் கிடைத்துவிடும் ஆனால் ஒரு தலித் மாணவனோ அவமானங்களை சகித்துக்கொள்ளவும் படித்துக்கொண்டால்தான் அவன் படிப்பை முடிக்க முடியும். ஒரு அலுவலகத்தில் வேலை மட்டும் செய்தால் ஒருத்தனுக்கு ஊதியம் கிடைத்துவிடும். ஆனால் ஒரு தலித் ஊழியரோ வேலையோடு சேர்த்து அநீதிகளை புறக்கணிப்புகளை சகித்துக்கொண்டால்தான் அவர் வேலையிலேயே இருக்க முடியும். இதை மற்ற அரசியல் கட்சிகளால் புரிந்துகொள்ள முடியுமா? 

காங்கிரஸ் அரசுக்கும் தற்போதுள்ள பாஜக அரசுக்கும் என்ன வித்தியாசம்? அது செக்யூலர் அரசு இது மதவாத அரசு என்பார்கள். சிறுபான்மையினர் விஷயத்தில் அவற்றுக்கிடையே வித்தியாசம் இருக்கலாம். தலித் விஷயத்தில் ஒன்றும் இல்லை. கடந்த ஆட்சியில்தான் வன்கொடுமைத் தடுப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. அதை சட்டமாக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட்டு மக்களவையில் அறிமுகப்படுத்தாமல் வைத்துக்கொண்டார்கள். சாதி இந்துக்கள் கோபித்துகொள்வார்கள் என்ற பயம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலித்துகளின் வாக்குகளை வாங்குவதற்காக அதை அவசர சட்டமாகப் பிறப்பித்தார்கள். தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பாஜக அரசு வந்தது. அந்த அவசரசட்டத்தைக் காலாவதியாகும்படி பாஜக அரசு விட்டுவிட்டது. மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவிட்டார்கள். அது டசட்ட வடிவம் பெற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. இதையெல்லாம் கேட்பதற்குக்கூட இன்று நாதியில்லை. நமது தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தபோது இதற்காகக் குரல் கொடுத்தார். இப்போது நாம் ஒவ்வொரு மாவட்டத் தலை நகரத்திலும் குரல் கொடுக்கிறோம். 

இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் ஆஸ்திரேலியாவில் வீர உரை ஆற்றிக்கொண்டிருந்தபோதுதான் அடிமைத்தனம் ஐநா அறிக்கை வெளியானது .உலகத்திலேயே அதிக அளவு அடிமைகளை வைத்திருக்கும் நாடு இந்தியாதான் என்று அது சொன்னது. சகுழந்தைத் தொழிலாளிகள், திருப்பூர் ப ன்ற நகரங்களல் கொத்தடிமைகளாக இருக்கும் பெண்கள், கட்டுமானத் துறையில் வெளிமாநில கூலிகள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு கிராமத்திலும் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருக்கும் தலித்துகள். இப்படியொரு கேவலமான நிலையில் நாட்டை வைத்திருப்பதற்கு வெட்கப்படவேண்டாமா? இப்போதும் தனிக் குடியிருப்பு, தனிக் கிணறு, தனி சுடுகாடு என வைத்துக்கொண்டு நாங்கள் முன்னேறிவிட்டோம் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லையா? 

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கிறார். சுத்தமாக இருக்கும் இடத்தில் குப்பையைக்கொண்டுவந்து கொட்டி கூட்டுவதுபோல போஸ் கொடுக்கிறார்கள். இப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இழிதொழில்களில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என விளக்கம் கேட்டிருக்கிறது. பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று கேட்டிருக்கிறது. சாக்கடைகளை சுத்தம் செய்ய எந்திரங்கள் இருக்கின்றன. நம்முடைய நகரத் தந்தைகளும் மாநகர மேயர்களும் சொகுசுக் கார்கள் வாங்க நிதியை செலவழிக்கிறார்கள். ஆனால் சாக்கடை அடைப்பை சரிசெய்யும் அந்த எந்திரத்தை வாங்குவதில்லை. யார் படத்தை மாட்டுவது யார் படத்தை அகற்றுவது என்று சண்டை போட்டுக்கொள்ளவே மாமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் போதவில்லை அவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகவே தெரியாது. இந்த ஊரை ஆன்மீக மையம் என்பார்கள், நான்கு நாட்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை செய்தாமல் விட்டால் இந்த ஊரே நாறிப்போய்விடும். அவர்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டின் சுத்தம் என்ன ஆகும்? ஆனால் அவர்களுடைய உயிர்களை துச்சமாக நினைக்கிறார்கள். ஒரு எந்திரத்தின் விலையைவிட அவர்களின் உயிர் மலிவாகப்போய்விட்டது. இந்த கேவலமான நிலைமை தொடர விடலாமா? நாம்தான் அதைக் கேட்கவேண்டும். இந்த மாவட்டத்தில் இருக்கும் நகராட்சிகள் பேரூராட்சிகளுக்குச் சென்று அவற்றின் தலைவர்களிடத்தில் நமது கட்சியின் சார்பில் மனு ஒன்றை அளியுங்கள் மத்திய அரசு இயற்றியிருக்கும் 'கைகளால் துப்புரவு செய்வதைத் தடை செய்யும் சட்டம் ' அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதா எனக் கேளுங்கள். பாதாள சாக்கடைகள் இருந்தால் அங்கே அடைப்புகளை சரிசெய்வதற்கான எந்திரங்ளை வாங்கச் சொல்லுங்கள். 

கொலை செய்ய்யப்படுவது மட்டும்தான் அடக்குமுறை அல்ல, வாயில் மலத்தைத் திணிப்பதும், சிறுநீர் கழிப்பதும் மட்டும்தான் வன்கொடுமை என்பதல்ல. தீண்டாமையும் சாதி வெறியும் இப்போது நுட்பமான விதங்களில் வெளிப்படுகின்றன. அவற்றையெல்லாம் கண்டறிந்து அவற்றை எதிர்ப்பதற்கான புதிய போராட்ட களங்களை உருவாக்குவோம்! நன்றி வணக்கம்! 

No comments:

Post a Comment