Thursday, November 20, 2014

நாடற்றவர்கள்



நாடற்ற நிலை என்பது குடியுரிமை ( citizenship) என்பதிலிருந்து பிறக்கிறது. ஒரு காலத்தில் பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்பட்ட குடியுரிமை இப்போது ஒருவரின் விருப்பத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இதை நவீன கால வாழ்க்கையில் நேர்ந்த முன்னேற்றம் என்றே சொல்லவேண்டும். 

இன்று எந்தவொரு நாடும் தமது குடிமக்களைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானவர்களை சேர்த்தே பராமரிக்கவேண்டியுள்ளது. அலுவல் காரணமாக நாடி வந்தவர்களும் அரசியல் காரணங்களால் தப்பி வந்தவர்களும் இதில் அடக்கம். உலகில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் நாடற்ற ஒரு குழந்தை பிறக்கிறது என UNHCR கூறுகிறது. 

நாடு என்பது ஒரு அரசியல் கட்டுமானமே தவிர புவியியல் யதார்த்தம் அல்ல. நாடற்ற நிலையைப் போக்கவேண்டுமெனில் ஒரு நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் குடிமகனுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். சட்டபூர்வனமான ஆவணங்கள் அனைத்திலும் Citizen என்பதற்குப் பதிலாக Resident என்ற சொல் பயன்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் இனம் தேசம் என்ற குறுகிய எண்ணங்கள் மறைந்து மானுடம் என மனது விரியும்! 

No comments:

Post a Comment