Sunday, November 23, 2014

செல்வா கனகநாயகம்( 1952-2014) மறைந்தார்





கனடாவின் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஈழத் தமிழ்க் கவிதைகளை தனது நம்பகமான மொழிபெயர்ப்பின்மூலம் உலக அரங்குக்குக் கொண்டு சென்றவருமான திரு செல்வா கனகநாயகம் நான்கு மணி நேரத்துக்கு முன்னர் மாரடைப்பில் காலமானார் என்ற செய்தியை கவிஞர் சேரன் குறுஞ்செய்தி மூலம் சற்று முன்னர் தெரிவித்தார். 

திரு செல்வா கனகநாயகம் அவர்களை சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை சந்தித்தேன். சேரனுக்கு சில புத்தகங்களைக் கொடுத்தனுப்புவற்காகத்தான் அவரை சந்தித்தேன். மிகவும் மென்மையான குரலில் ஆனால் உறுதியாகப் பேசினார். சேரனும் அவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 

தமிழ்க் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலொன்று (In Our Translated World: Contemporary Global Tamil Poetry ) அண்மையில் அவரால் தொகுத்து வெளியிடப்பட்டிருந்தது. அதைப்பற்றி நான் முகநூலில் எழுதியிருந்தேன். 

 ஈழத் தமிழ்மக்களுக்கு தமது நியாயங்களை உலக அரங்குக்கு எடுத்துச்செல்ல திரு செல்வா கனகநாயகம் போன்றவர்கள் மிகவும் அவசியம். அவரது மரணம் ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பு. எனது ஆழ்ந்த அஞ்சலி. 

No comments:

Post a Comment