Thursday, June 5, 2014

நீதி யார் பக்கம் ?



" நீதி நம் பக்கம் இருக்கும்போது நமது போராட்டத்தில் நாம் தோற்போம் என நான் நினைக்கவில்லை" என்றார் அம்பேத்கர். போராட்டங்களின் முடிவுகள் நீதியின் வலிமையால் தீர்மானிக்கப்படும் நாட்டுக்குத்தான் இது பொருந்தும். சாதியின் வலிமையால் தீர்மானிக்கப்படுகிற நாட்டில் இது வெறும் கனவு மட்டுமே. 


இந்திய தலித்துகளின் முன்னால் இருக்கும் கேள்வி: 'நீ போராடாமல் சாகப் போகிறாயா? போராடி சாகப்போகிறாயா? ' என்பதுதான். எதைத் தேர்வுசெய்தாலும் அடையப்போவது மரணம் மட்டும்தான். 


உனக்கொரு பொன்னுலகம் காத்திருக்கிறது என்று சொல்லி அழைத்தார் மார்க்ஸ். தொழிலாளர்கள் திரண்டார்கள்! ' உனக்குப் புதைகுழி காத்திருக்கிறது' என்று அழைத்தால் யார் வருவார்கள்? எனக் கேட்டான் அவன்


' தனது மரணத்தைத் தானே தீர்மானித்துக்கொள்பவர்மீது எவரும் அதிகாரம் செலுத்தமுடியாது' என்றான் இவன்.

No comments:

Post a Comment