Saturday, June 21, 2014

நிஸார் கப்பானி கவிதை தமிழில்: ரவிக்குமார்

கோடை
கடற்கரையில் கிடக்கிறேன்
உன்னை நினைத்தபடி

நான் உன்னைப்பற்றி உணர்ந்ததைக்
கடலிடம் சொன்னேனா என்ன

கரைகளைத் துறந்து
கிளிஞ்சல்களைத் துறந்து
மீன்களைத் துறந்து
அது
என் பின்னால் வருகிறது

No comments:

Post a Comment