Thursday, May 8, 2014

கீழத்தஞ்சை வரலாறு

தோழர் ஜி ராமகிருஷ்ணன் எழுதிய ' கீழத் தஞ்சை : விவசாயிகள் இயக்கமும் தலித் மக்களின் உரிமைகளும்'என்ற சிறு நூலின் அறிமுகக் கூட்டம் சென்னை கிண்டியில் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தோழர் ஆர்.நல்லகண்ணு பேசிக்கொண்டிருக்கிறார். நான் பார்வையாளராக கலந்துகொண்டிருக்கிறேன். விவசாயத் தொழிலாளர் போராட்ட வரலாற்றைத் தோழர்கள் எப்படி விவரிக்கிறார்கள் என்பதைக் கேட்கவேண்டும் என்ற ஆர்வம். நானும் கீழத் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பது ஒரு கூடுதல் காரணம். அந்த நூலை முன்பே வாசித்துவிட்டேன். அதைப் பற்றிப் பின்னர் எழுதுவேன். 

No comments:

Post a Comment