Wednesday, May 14, 2014

லாங்ஸ்டன் ஹியூஸின் கவிதை தமிழில்: ரவிக்குமார்



கூண்டு ஒன்றிலிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் பெண் ஒருத்தியைப் பார்த்தேன்

அவளுக்குச் சிறகுகள் இருந்தன

அந்தக் கூண்டின் கதவு அவளது சிறகுகளின் மேல் 

விழுந்தது


அவளது நீண்ட சிறகுகள் தரையில் இழுபட்டன 

அவள் எழுந்து நிற்க முற்பட்டாள் 

ஆனால் தனது சிறகுகளைக் 

கதவின் சுமையிலிருந்து விடுவித்துக்கொள்ளும் பலம் அவளுக்கில்லை

அவள் தனது சிறகுகளால் பிடிபட்டாள் 

சிறைப்பட்டாள்

No comments:

Post a Comment