Wednesday, March 26, 2014

புத்துளி'சம்பத் 'நாஞ்சில்' சம்பத் ஆன கதை!

'


நாஞ்சில் சம்பத் என இப்போது அறியப்படும் சம்பத் முன்னர் அவர் பிறந்த ஊரான புத்துளி சம்பத் என்றே அழைக்கபட்டாராம். இந்தத் தகவலை ஆவடி நாசர் இன்று சொன்னார். 

" 1987 ஆம் ஆண்டு சம்பத்தை அழைத்து ஆவடியில் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது நானும் அண்ணன் மதுராந்தகம் ஆறுமுகமும் நாஞ்சிலாரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குப் போயிருந்தோம். அவருக்கு அப்போது ஒருவர் சிகை திருத்திக்கொண்டிருந்தார். அப்போது அண்ணன் ஆறுமுகம் அவர்கள் என்னை அச்சகத்துக்குப் போய் போஸ்டர் ரெடியாகிவிட்டதா என்று பார் எனச் சொன்னார். அதைக் கேட்ட நாஞ்சிலார் ' என்ன போஸ்டர்? எனக் கேட்க ' புத்துளி சம்பத் கூட்டம் போடுகிறோம் என அவர் பாதில் சொன்னார். ' அவன் நம்ம ஊர் பையனாச்சே! நல்லா பேசுவான். அவன் பேரை நாஞ்சில் சம்பத்னு போடுங்க. அவன்கிட்ட நான் தான் அப்படி போடச்சொன்னேன்னு சொல்லுங்க' என்றார் நாஞ்சிலார். ஏற்கனவே போஸ்டர் அச்சாகிவிட்டது. என்றபோதிலும் நாஞ்சில் சம்பத் என்று போட்டு மூன்று பிட் போஸ்டத் அடித்து அமர்க்களமாக அந்த கூட்டத்தை நடத்தினோம். அதிலிருந்து அந்த பெயரே நிலைத்துவிட்டது" என்று அந்தக் கதையை சொன்னார் நாசர். 

இன்று ஆவடியில் நாஞ்சில் சம்பத் வந்து அதிமுகவுக்குப் பிரச்சாரம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். அந்த கூட்டத்தில் இருநூறுபேர்கூட இல்லையாம்! 

No comments:

Post a Comment