Saturday, March 22, 2014

நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு விடுமுறை இல்லையென்றது யார்?


திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர் கூட்டம் இன்று ( 22.03.2014) பேரம்பாக்கத்தில் நடைபெற்றுவருகிறது. அதில் கலந்துகொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் திரு. காயல் அகமது சாலி அவர்கள் பேசும்போது " நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு விடுமுறை விடப்படும் என்று அறிவித்தவர் திமுக தலைவர் கலைஞர். நபிகள் பிறந்த மண்ணில்கூட அப்படி விடுமுறை விடப்படுவதில்லை. ஆனால் , அதை ரத்து செய்தவர் ஜெயலலிதா. 




" முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும், பின்னர் அவர்களுக்குத் தனியே இட ஒதுக்கீடு வழங்கியதும் கலைஞர்தான். ஆனால் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர் ஜெயலலிதா" எனக் குறிப்பிட்டார். 


நபிகள் பிறந்த நாளான மிலாது நபி மட்டுமின்றி அம்பேத்கர் பிறந்த நாள், உழவர் திருநாள் உள்ளிட்ட ஆறு நாட்களுக்கு விடப்பட்டுவந்த பொது விடுமுறையை ரத்துசெய்து 2003 ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆணை பிறப்பித்தது. அந்த ஆறு நாட்களை  வரையறுக்கப்பட்ட விடுமுறை என வகைப்படுத்தி அவற்றுள் ஏதேனும் மூன்று நாட்களுக்கு மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என சொல்லப்பட்டது. ( http://www.hindu.com/2003/11/29/stories/2003112907310400.htm) அதிமுக ஆட்சி முடிந்தபின் மீண்டும் மிலாது நபி நாளை விடுமுறை நாளாக அறிவித்தது திமுக அரசு. இஸ்லாமிய பெருமக்கள் அதை மறக்கமாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் திரு காயல் அகமது சாலி. 


No comments:

Post a Comment