Tuesday, March 11, 2014

ரவிக்குமார் கவிதை 12.03.2014




உன்னிடம் இருக்கிறது ஒருபோதும் தேயா நிலவு, உதிர்ந்து தீராத
நட்சத்திரம், கனவின் நதி , ஆசைக் கடல்
பட்டாம்பூச்சிகளால் நீ தொடுக்கும்
மாலையைக் 
கவிதையென வியக்காதார் யார்? 

வாழ்வின் சாம்பலில் 
என் குழந்தையின் ரத்தத்தைப் பிசைந்து
வனைகிறேன் ஒரு பொம்மையை
வரலாற்று நெருப்பில்
அரைகுறையாய் வெந்து கிடக்கும்
என் முன்னோர்கள்
விளையாட 

இதைக் கவிதையென்று சொல்வோர் யார்? 

No comments:

Post a Comment