Wednesday, February 26, 2014

ரவிக்குமார் கவிதை (26.2.2014)



இரவை ஊடறுக்கும் 
நாயின் அழுகையைப்போல 
கேட்கிறது
அவநம்பிக்கையின் அழைப்பு 
நடுப்பகல் காக்கையாய்க் கரைகிறது
வெறுமை 
நான் 
இதயத்தைத் திறந்து ஒரு புறாவை எடுக்கிறேன்
குழந்தையின் சிரிப்பால்
எழுதிய செய்தியோடு வானில் விடுகிறேன்
தெரியாதா எனக்கு
இந்த ஊரில் 
வீடற்றவர்களும் பெயரற்றவர்களும்
வேண்டுதல்களைத் தொங்கவிட்டுச்செல்லும் 
அரச மரம் நீதானென்பது


No comments:

Post a Comment