Tuesday, June 18, 2013

கலாச்சார ஊழல்




ஹலோ எஃப் எம்மில் நான் இன்று ( 18.06.2013) பேசியது: 
முறையற்ற விதத்தில் பொருளீட்டுவதை நாம் ஊழல் என்கிறோம். இந்தப் பொருளாதார ஊழலைத் தடுப்பதற்குப் பல்வேறு வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறோம். சட்டங்களும் இருக்கின்றன. ஆனால் கலாச்சார ஊழல் குறித்து நாம் கவலைப்படுவதில்லை. ஒருவர் அவரது உழைப்பு, ஆற்றல் ஆகியவற்றுக்கு அதிகமாக சமூக மதிப்பை, செல்வாக்கைப் பெறுவது கலாச்சார ஊழல் ஆகும். இதைக் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ எந்தவொரு ஏற்பாடும் நம்மிடமில்லை. இதை ஒரு பிரச்சனையாகவும் நாம் கருதுவதில்லை. பொருளாதார ஊழலைவிடவும் அபாயகரமானது இந்த ஊழல். பல நூறு ஆண்டுகளாக நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் இந்த கலாச்சார ஊழலை நாம் சகித்துக்கொள்ளப் பழகிவிட்டோம். அதனால் பொருளாதார ஊழலும் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. பிறப்பினாலேயே ஒருவர் உயர்ந்தவர் இன்னொருவர் தாழ்ந்தவர் என்ற சிந்தனை எவ்வளவு மோசமானது என்பதை உணராமல் கலாச்சார ஊழலைக் களைய முடியாது. பொருளாதார ஊழலையும் அதற்கு அடித்தளமாக இருக்கின்ற கலாச்சார ஊழலையும் ஒழிப்பதற்கு நாம் முன்வரவேண்டும். 

No comments:

Post a Comment