Saturday, June 1, 2013

நட்பு

நீண்டகாலம் வாழ்ந்தாய்
இப்போதும் வாழ்க்கைச் சூறாவளிகளிலிருந்து தப்பித்திருக்க உன்னால் முடிகிறது
உன் இதயத்துக்கு இதம்தரும்
நண்பனென யாரையும் உன்னால்
சொல்லமுடியவில்லை

ஆண்டுகள் பல கடந்து
இன்னும் நீ முதுமையடையும்போது
மக்கள் உன்னைப் பார்த்துச் சொல்வார்கள்
" நூறு வயதிருந்தான்
பாவம்
ஒரு நாளைக்கூட வாழவில்லை"

- ரஸூல் கம்ஸதேவ்
தமிழில்: ரவிக்குமார்

No comments:

Post a Comment