Wednesday, May 15, 2013

சுவாமி சகஜானந்தாவுக்கு மணிமண்டபம் : முதல்வர் அறிவிப்பு




ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ் வை அர்ப்பணித்தவரும், மக்களின்
அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்துவந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராகபணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தா அவர்களுக்கு, அவர் வாழ் ந்த இடமானசிதம்பரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்முனைவர் செ.கு. தமிழரசன் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். இதேகோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.பாலகிருஷ்ணன்  மற்றும் திரு.ஆர்.ராமமூர்த்தி ஆகியோரும் விடுத்திருந்தனர்.இவர்களுடைய கோரிக்கையினை ஏற்று, சுவாமி சகஜானந்தா தொண்டு செய் துவாழ் ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை மகிடிநச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,
2000-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் முனைவர் செ.கு. தமிழரசன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கையினை ஏற்று, சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

1 comment: