Sunday, November 25, 2012

தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்


Ancient Monuments and Archaeological Sites and Remains Rulesக்கு ஏற்ப The Tamil Nadu Minor Minerals  (Concession) Rules, 1959 திருத்தப்பட்டதா ? 


தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் குறித்து 2010 மே மாதத்தில் ரவிக்குமார்  சட்டப் பேரவையில் வினா எழுப்பிப் பேசியது  : 




6-5-2010
வினாக்கள்-விடைகள்
147-
கல்வெட்டுகள்
*121584-திரு. து. ரவிக்குமார்:
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-
கல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் அமைந்துள்ள இடத்தில் 400 மீட்டர் வரை கல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் விலக்கியதால் கல்வெட்டுகளைப் பாதுகாக்க அரசு ஆவன செய்யுமா?
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 
கல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் அமைந்துள்ள மலைப் பகுதிக்கு அருகில் 300 மீட்டர் வரையுள்ள பகுதிகள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு பேரவைத் தலைவர்:  மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.
திரு. து. ரவிக்குமார்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்திலே 31 ஊர்களில் 90 தமிழ் பிராமி கல்வெட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன. இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டுகள்தான் தமிழ் செம்மொழி என்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தினுடைய காலத்தை வரையறுப்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்களாக இருப்பவை இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டுகள்தான். இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்காக தமிழக அரசு 1966 ஆம் ஆண்டிலே கொண்டு வந்த சட்டத்தில், 300 மீட்டர் வரையிலே கல் குவாரிகளை அனுமதிக்கக்கூடாது, கட்டடங்களை எழுப்பக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தாலுங்கூட, அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே, அந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற ஆதாரபூர்வமான, வரலாற்றுத் தொன்மைவாய்ந்த அந்த இடங்கள் அழிகின்ற ஒரு நிலைமை இருக்கின்றது.  இதனால், தமிழினுடைய தொன்மையே கேள்விக்குறியாக மாறுகின்ற ஓர் ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துகின்ற இந்த நேரத்திலே, அதற்கு ஆதாரமாக இருக்கின்ற இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன். 
முற்பகல் 10-15
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள். 
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே இந்த மன்றத்திலே இதுசம்பந்தமான ஒரு துணைக் கேள்விக்கு நான் விரிவாக விடையளித்திருக்கின்றேன்.  அரசைப் பொறுத்தமட்டில், இந்தக் கல்வெட்டுகள் இருக்கக்கூடிய பகுதிகளிலிருந்து 100 மீட்டர் வரையிலும் prohibited area, அதற்கு மேலே ஒரு 200 மீட்டர் regulated area  என்ற வகையிலே, protected areaவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அவர் குறிப்பிடுவதைப்போல, கோர்ட் தீர்ப்பு இப்போது அரசுக்குச் சாதகமாக இல்லை.  இருந்தாலுங்கூட, அதன் தொடர்பாக appeal செய்வதற்காக நமது Director of Geology and Miningசார்பில் அதற்கான நடவடிக்கையை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஏற்கெனவே நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலே குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டு, அத்தகைய பகுதி முழுவதுமாக, அந்த entire site  முழுவதுமாக protected monument  ஆக நாம் அறிவித்தால்தான் இதைக் காப்பாற்றக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று குழுவினுடைய சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.  இவற்றையெல்லாம் கருத்திலேகொண்டு நம்முடைய அரசு துறை ரீதியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இப்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார். 
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற திருவாதவூர், கழுகுமலை, கீழவளவு, மேலகுயில்குடி, முத்துப்பட்டி, பொங்கார் புளியங்குளம் போன்ற எல்லா இடங்களிலுமே இன்றைக்குக் கல் குவாரிகள் அனுமதிக்கப்பட்டு, அந்தக் கல்வெட்டுகளில் சிதைவு ஏற்படுகிற ஓர் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இப்போது அந்த நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தக் கல் குவாரியை நடத்துகிறவர்கள் இந்த ஆதாரங்களையெல்லாம் அழித்துவிடுகிற ஓர் ஆபத்து இருக்கிறது. எனவே, இந்த ஆபத்தை உணர்ந்து, உடனடியாக இதிலே செயல்படுமாறு தங்கள் வாயிலாக நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். 
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள். 
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசும் அந்த ஆபத்தை உணர்ந்திருக்கிறது. நான் இன்னும் இந்த அவைக்கு ஒரு கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய மதிப்பிற்குரிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினுடைய தலைவி, பெருமதிப்பிற்குரிய அன்னை சோனியா காந்தி அம்மையார் அவர்கள், இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்ற வேண்டுமென்றும், இத்தகைய சமணப் படுக்கைகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு அவர்களே நேராக எடுத்துச் சென்று, தலைவர் கலைஞர் அவர்கள் அவர்களுக்கு நேரடியாகக் கடிதமும் எழுதியிருக்கிறார்கள். இத்தகைய விஷயங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்ற அம்மையார் அவர்களுடைய உணர்வைப் புரிந்துகொண்டு, தலைவர் கலைஞர் அவர்கள் அரசு அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.  The Tamil Nadu Minor Minerals  (Concession) Rules, 1959 - â¡ð¶AMASAR â¡Aø Ancient Monuments and Archaeological Sites and Remains Rules என்ற அந்தத் துறையினுடைய சார்பாக இருக்கக்கூடிய விதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. It is not in conformity with AMASAR Rules எனவே, இந்த நிலையில் அதற்குத் தேவையான திருத்தங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  நம்முடைய உயர் கல்வித் துறையின் சார்பாக ஒரு குழுவும் அதற்காக அமைக்கப்பட்டு, அத்துறையும் அதை ஆய்வு செய்துகொண்டிருக்கிறது.  தேவையான நடவடிக்கைகளை அரசு இந்த விஷயத்தில் உறுதியாக எடுக்கும் என்பதை நான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

No comments:

Post a Comment