Friday, September 16, 2011

வட்டார வழக்கு





பொதுவாக வட்டார வழக்குகளை தவிர்க்கிறோம். ஏனென்றால், வட்டார வழக்குகளின் தன்மையைக் கொண்டே, இந்த வார்த்தைகள் அவை பயன்படுத்தப்படும் வட்டாரத்தைத் தாண்டி பிற பகுதிகளில் புரியாமல் போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

ஆயினும், இலங்கை, தமிழ்நாடு ஆகிய இரு பகுதிகளுக்கும் நாங்கள் ஒலிபரப்புவதால், இரு பகுதிகளிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைப் பிரயோகங்களை நாங்கள் உபயோகிக்கிறோம். மற்ற பகுதியில் முழுமையாக புரியாது என்று நாங்கள் கருதும் வார்த்தைகளைத் தவிர்த்து விடுகிறோம்.

உதாரணத்துக்கு அங்குரார்ப்பணம், சிரேஷ்ட,அத்யட்சகர், விக்யாபனம் போன்ற வார்த்தைகள் இலங்கைத் தமிழ் சொல்லாடலில் இருக்கின்றன. ஆனால் அவை பொதுவாக தமிழ்நாட்டுத் தமிழ் வழக்கில் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் அது போன்ற வார்த்தைகளை முடிந்த அளவில் தவிர்க்கிறோம். ஆனால், இலங்கைச் செய்திகளில் இந்த வார்த்தைகள் இலங்கைச் செய்தியாளர்கள் மற்றும் இலங்கைப் பிரமுகர்களால் பயன்படுத்தப்பட்டால், அவை அனுமதிக்கப்படுகின்றன.
நன்றி :பி பி சி தமிழோசை

No comments:

Post a Comment