Friday, September 16, 2011

துல்லியத்தன்மை




எந்த ஒரு செய்தி ஊடகத்துக்கும் மொழியைக் கையாளுவதில் துல்லியத்தன்மை மிகவும் அவசியம். சொல்லப்படும் தகவலை குழப்பம் ஏதுமின்றி நேயர்கள் புரிந்துகொள்ள இது அவசியம்.மொழிபெயர்ப்பை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதற்கு இதுவொரு அடையாளம். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது இந்த துல்லியத்தன்மை பாதிக்கப்படாமல் செய்திகளைத் தரவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். எந்த ஒரு மொழியிலும் வார்த்தைகளுக்கு சூழ்நிலைக்கேற்ப பொருள் மாறும் தன்மை இருக்கும். ’சென்சிடிவ்’ மற்றும் ‘ சீரியஸ்’ போன்ற வார்த்தைகளும் அப்படித்தான்.அவை எந்தச் சூழலில் பயன்படுத்தப்படுகின்றனவோ அதற்கேற்ப பொருளும் மாறுபடும். ’சென்சிடிவ்’ என்ற வார்த்தையை ’மென்னுணர்வுகளைக் கிளப்பும்’, ’சிக்கலைத் தோற்றுவிக்கக்கூடிய’,’பிரச்சினையை எழுப்பக்கூடிய’ என்று சூழ்நிலைக்கேற்ப மொழிபெயர்க்கிறோம். ’சீரியஸ்’ என்ற வார்த்தையை, ’பாரிய’, ’பெரிய’,  என்று சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்துகிறோம்.

அகராதியில் ஒரு சொல்லுக்கு என்ன பொருள் தரப்பட்டிருக்கிறது என்பது ஒரு வழிகாட்டும் விஷயம்தான். அந்தச் சொல்லுக்கு நம் சூழலில் என்ன பொருள் தரக்கூடிய சொல்லைப் பயன்படுத்தவேண்டும் என்பதைப் பார்த்து அதன்படியே அந்தச் சொல்லை மொழிபெயர்க்கவேண்டும்.

நன்றி :பி பி சி தமிழோசை

No comments:

Post a Comment