Sunday, December 19, 2010

ஆதாரங்களோடு எழுத்துகளை பதிவு செய்பவர் ரவிக்குமார்: திருமாவளவன் புகழாரம்

Reply

Ravikumar

 to ravi
show details 11:04 PM (3 hours ago)




First Published : 19 Dec 2010 02:27:01 AM IST



புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் திட்டக்குழுத் துணைத்தலைவர் நாகநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கே.ஏ.குணசேகரன், இந்திய யூனியன் முஸ்லீம
சென்னை, டிச. 18: தான் எழுதும் கட்டுரைகளில் ஆதரங்களோடு எழுத்துகளைப் பதிவு செய்வதில் வல்லவர் ரவிக்குமார் எம்.எல்.ஏ. என விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார் எம்.எல்.ஏ. எழுதிய ஆள்வதன் அரசியல், பாப் மார்லி, அண்டை அயல் உலகம், மால்கம் எக்ஸ் ஆகிய நான்கு புத்தகங்கள் உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
புத்தகங்களை வெளியிட்டு திருமாவளவன் பேசியதாவது: ரவிக்குமார் பலரும் அறிந்த ஆற்றல்மிக்க எழுத்தாளர்களுள் ஒருவர்.
செய்திகளை சொற்களை அடுக்கிச் சொல்லிக்கொண்டு போகாமல் அவற்றை நம் முன்னால் காட்சியாக விரியும் வகையில் எழுதும் ஆற்றல் படைத்தவர். முதல்வர் கருணாநிதியே அவருடைய எழுத்துகளைப் படித்துவிட்டு உடனடியாக அதன் நிறை, குறைகளைக் குறிப்பிட்டு மனதாரப் பாராட்டும் அளவுக்கு எழத்தாற்றல் படைத்தவர்.
அதற்குக் காரணம் அவர் தன்னுடைய எழுத்துகளை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்வதுதான். அவருடைய எழுத்து ஒடுக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்கிறது. சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது என்றார்.
நன்றி : தினமணி 

No comments:

Post a Comment