Sunday, October 31, 2010

தமிழைக் காக்கும் போராட்டம் - மணி மு. மணிவண்ணன்


மணிப்பிரவாளத்தால் தமிழுக்கு நேர்ந்த தொல்லை கொஞ்சநஞ்சமல்ல. தனித்தமிழ் இயக்கம் வந்து அதை மூலையில் முடக்கியது.  அந்தப் பூதத்தை முடக்கத்திலிருந்து நீக்கி தமிழில் நஞ்சு கலக்க சிலர் அரும்பாடுபடுகின்றனர் . 
அவர்களின் முயற்சியால்  இந்திய அரசு  கிரந்தக் குறியீடுகளில் தமிழ் எழுத்துகளையும் நிரப்ப ஏற்பாடு செய்திருக்கிறது.  ஷர்மாவின் முன் மொழிபை  வரும் நவம்பர் 6 அன்று நடக்கும் யூனிகோடு நுட்பக் குழுவில் எதிர்க்க அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அறிகிறோம்.  ஆனால், நடுவணரசு அமைச்சர் ஆ. இராசாவின் தலைமையில் இயங்கும் தகவல் தொழில் நுட்பத்துறையே கிரந்தத்தில் தமிழ் எழுத்துகளைக் கூட்ட இருக்கிறது என்ற செய்தி அமைச்சருக்கோ, தமிழக முதல்வருக்கோ தெரியுமா என்று தெரியவில்லை.  தெரிந்திருந்தாலும் இதனால் விளையக் கூடக் கேடு என்ன என்பதையும் அவர்களுக்கு யாரும் எடுத்துரைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

1. இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பில் கிரந்தம் எழுத்துகளுக்கு யூனிகோடில் இடம் பெற ஏற்பாடு செய்ய ஒரு முன்மொழிவு அனுப்பப் பட்டுள்ளது.
2. இதில் தற்போதைய கிரந்தத்தில் இல்லாத தமிழ் எழுத்துகள் ஐந்து - எ, ஒ, ழ, ற, ன - புதிதாகக் கூட்டப் பட்டுள்ளன.  இதை முதலில் முன்மொழிந்து இன்று வரை வலியுறுத்தி வருபவர் நாசா கணேசன்
3. இந்திய அரசின் முன்மொழிவு, யூனிகோடு தென்னாசியத் துணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.
4. இந்திய அரசே அதன் முன் மொழிவிலிருந்து தமிழ் எழுத்துகளை நீக்கினால் ஒழிய, புதிய கிரந்தத்தில் இந்தத் தமிழ் எழுத்துகள் இருக்கும். 
5. இதைத் தடுக்க வேண்டும் என்றால் நமக்கு இருப்பது இன்னும் 4 நாட்கள் மட்டுமே.
ஏன் இதைத் தடுக்க வேண்டும்?
1. கிரந்தம் வடமொழியை மட்டும் எழுத உருவாக்கப் பட்ட எழுத்துமுறை
2. இதில் இதுவரை தமிழ் எழுத்துகள் (ஐந்து - எ, ஒ, ழ, ற, ன ) இல்லை.
3. தமிழ் எழுத்துகள் நொண்டி எழுத்துகள், அவற்றால் சமஸ்கிருதத்தை எழுத முடியாது என்று கிண்டல் செய்து கொண்டு இருந்தவர்கள், பல முறை வடமொழியின் வர்க்க எழுத்துகளைத் தமிழில் கொண்டு வர முயன்று வந்திருக்கிறார்கள்.
4. இந்த முயற்சி வெற்றி பெற்றால் என்ன ஆகும் என்று தமிழ் ஆர்வலர்கள் அஞ்சுபவற்றுள் பின் வருபவை அடங்கும்:
 அ. கிரந்த எழுத்தையே முழுத் தமிழையும் எழுதி, தமிழையும் மலையாளம் போன்ற கதம்ப மொழியாக்கும் முயற்சிக்கு இது வழி  வகுக்கும்.  இணைப்பில் உள்ள எழுத்துகள் தமிழாகும். 
ஆ. ஏற்கனவே ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் ஆவது போதாது என்று தமிழ் தன் தனித்தன்மையை இழந்து மலையாளம் போல ஒரு கலப்பட மொழியாகும்.
 இ. தமிழ் மொழி, எழுத்து எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற பரப்புரை வருங்காலத்தில் வலுவாகும். 
 ஈ.  தமிழ் “நீச்ச பாஷை”, அடிமை மொழி, தேவமொழியிலிருந்து  பிறந்து பின்னால் இழிவான மொழி என்பவை போன்ற பரப்புரைகள் தோன்றலாம்.
 உ.  அழிந்து போன மணிப்பிரவாள நடை மீண்டும் உயிர்பெற்று எழுந்து அதுதான் உயர்ந்த நடை என்று வலுப்பெறலாம்.



உங்கள் கனவு எனக்குத் தெரியும் - ரவிக்குமார்



மனிதர்கள் ஏன் கனவு காண்கிறார்கள் என்பதற்கு இதுவரை அறிவியல் ரீதியான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் , குறிப்பிட்ட ஒரு கனவை  நாம் எப்போது காண்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாகச் சொல்லக்கூடிய காலம் நெருங்கிவிட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தான் கண்ட கனவுகள் குறித்து ஒருவரிடம் கேட்டறிவது பின்னர் அவற்றை மனோவியல் ரீதியாக வியாக்யானம் செய்வது என்பதை இதுவரை மனோதத்துவ நிபுணர்கள் செய்துவந்தனர். ஆனால் இனி ஒரு கனவு எப்படி உண்டானது என்பதைக் கண்டறிந்துவிடலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கான வழிமுறை ஒன்றைத் தாம் கண்டறிந்திருப்பதாக"' நேச்சர்" என்ற பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரை  ஒன்றில் விஞ்ஞானி டாக்டர் மோறன் செர்ப் ( Dr Moran Cerf  ) கூறியிருக்கிறார். குறிப்பிட்ட சில நியூரான்கள் அல்லது மூளையின் செல்கள் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையோடு தொடர்புகொண்டதாய் இருக்கின்றன என்று அவர் கூறுகிறார். எனவே , நியூரான்களோடு தொடர்புடைய பொருட்கள் , நபர்கள் கருத்தாக்கங்கள் முதலானவற்றைத் தொகுத்து ஒரு டேட்டா பேஸை உருவாக்கிவிட்டால் அதன்பின் நாம் எளிதில் கனவு காண்பவரின் மூளையைப் படித்துவிடலாம் என்கிறார் டாக்டர் செர்ப். http://www.nature.com/news/2010/101027/full/news.2010.568.html


உதாரணமாகச் சொன்னால் ,    பரிசோதனைக்கு உட்படும் ஒரு நபர்   நடிகை மர்லின் மன்றோவை நினைக்கும் போது அந்த நினைப்புடன் தொடர்புடைய அவருடைய மூளையில் இருக்கும் நியோரோன் சுடர்விடும் . தற்போது இந்த ஆராய்ச்சியில் இருக்கும் சிரமம் என்னவென்றால் ஒருவரது மூளையின் செயல்பாட்டைப் படிக்க அறுவை சிகிச்சை மூலம் அவரது மூளையின் ஆழத்தில் சில  எலக்ட்ராடுகளைப் பதித்துவைக்க வேண்டியிருக்கிறது. மூளை பாதிக்கப்பட்ட சில நோயாளிகளிடம்தான் இப்போது இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது ஆனால் இப்படியான அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமலேயே இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது என்று டாக்டர் செர்ப் கூறுகிறார்.  
தூங்குபவர்களின்  மூளையின் அலைகளை புரிந்துகொள்வதும், அதில் இருந்து அவர்கள் காணுகின்ற கனவுகளை புரிந்து கொள்வதும்தான் ஆய்வாளர்கள் எடுக்கப்போகின்ற அடுத்த கட்ட முயற்சியாகும். ஒரு நபரின் மூளையைப் படித்து அவரது எண்ணங்களை அறிந்துகொண்டுவிட்டால் அதுவொரு புரட்சியாகவே இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் அடுத்த கட்டம் என்னவென்பதையும் அவர்கள் யூகமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு மின்னஞ்சலை எழுதுவதற்குப் பதிலாக நாம் கணினித் திரையின் முனனால் உட்கார்ந்து அதை நம் மனதில் நினைத்தாலே போதும் எழுத்துகள் உருப்பெற்றுவிடும். கடிதம் மட்டுமல்ல கட்டுரைகளையே கூட நாம் அப்படி எழுதிவிட முடியும். 
இன்று என் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன் . அவர் நியூமரலாஜியில் நம்பிக்கைகொண்டவர். எனது பிறந்த தேதியைக் கேட்டு உடனே எனக்கு பலன் சொல்ல ஆரம்பித்துவிட்டார். '" உங்களுடைய பர்த் நம்பர் ஒன்று லைப் நம்பர் ஆறு . ஒன்றின் பலன் இதுவரை இருந்தது. அது உங்களைப் பிரபலப்படுத்திவிட்டது. இனி உங்களுக்கு நம்பர் ஆறின் பலன்தான். அது கலைத் துறையில் உங்களைக் கொண்டுபோய் சேர்த்துவிடும். உங்களுக்கு காதல் உறவுகளும்கூட ஏற்படலாம் " என்றார். நான் விவரம்தெரிந்த நாளிலிருந்தே பகுத்தறிவுவாதி. இப்படியான சோதிடங்களை நம்பாதவன் . ஆனால் நண்பர் சொன்னதைக் கேட்டதிலிருந்து அதை நம்பலாம் போலத்  தோன்றுகிறது. ஆனால் இந்த கனவு மெஷினை உருவாக்கிவிட்டால்  சோதிடர்களுக்கு வேலை போய்விடும் அல்லவா ?. அந்த மெஷினை உடனே காவல்துறையில் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் இல்லையா . ஏற்கனவே ப்ரைன் மேப்பிங் என்று கொல்கிறார்கள். இந்த மெஷின் கிடைத்தால் சும்மா இருப்பார்களா .
அடுத்தவர்களின் கனவைப் படிப்பது சுவாரஸ்யமானதுதான் . ஆனால் அதற்கென்று ஒரு மெஷின் வந்துவிட்டால் அந்த ஈர்ப்பு போய்விடும். வாழ்க்கையில் வெறுமை படிந்துவிடும். ஆனால் மனதில் நினைப்பதை எந்த ஊடகத்தின் துணையும் இல்லாமல் பதிவுசெய்ய முடிந்தால் அற்புதமான இலக்கியங்கள் உருவாகும் என்றே தோன்றுகிறது. இப்போதைக்கு நாம் அந்த மெஷினைப்பற்றிக் கனவு காண்போம். 

சமூக நீதியுடன் கூடிய சட்டமேலவை - ரவிக்குமார்


தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.   தமிழகத்தின் சட்டமன்ற வரலாற்றில் சட்ட மேலவைக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்திய அரசு சட்டம் 1935ன் படி முதன்முதலில் சட்டமேலவை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு மேலவை என்கிற பெயரில் ஒரு அவை இருந்தபோதிலும் தற்போது பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள மேலவைக்கும் அதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்பிருந்த மேலவையின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். 1937ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமைக்கப்பட்ட மேலவையானது சட்டப்பேரவையைப் போல ஐந்தாண்டுக்கு ஒருமுறை கலைந்துவிடக்கூடியதாக இல்லாமல் நிலைத்திருக்கக்கூடியதாக அமைக்கப்பட்டது. மேலவையின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதவி இழந்து, வேறு உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள் என்ற நடைமுறை அப்போதுதான் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக கொண்டு வரப்பட்ட மேலவையில் குறைந்த பட்சம் 54 உறுப்பினர்கள் இருப்பார்கள் என வரையறுக்கப்பட்டது. அந்த நடைமுறை 1952ஆம் ஆண்டு வரை நீடித்தது.
அதுவரை 54 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த மேலவை 1952ஆம் ஆண்டுக்குப் பிறகு 72 உறுப்பினர்கள் என எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதனுடைய உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுவது என்ற நடைமுறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும், சட்டப்பேரவை உறுப்பினர்களால் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் வரையறுக்கப்பட்டது. பட்டதாரிகளுக்கென ஆறு பிரதிநிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகமெங்கும் உள்ள ஆசிரியர்கள் வாக்களித்து ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள பன்னிரெண்டு உறுப்பினர்களை ஆளுநர் நியமிப்பார் என தீர்மானிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேலவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி மூலம் பதவி இழப்பார்கள் என்றும் திருத்தம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் முக்கியமான தலைவர்கள் பலரும் சட்டமேலவையில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மேலவையின் விதிகளின்படி அதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிற உறுப்பினர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என வரையறுக்கப்பட்டிருந்ததால் மூதறிஞர் ராஜாஜியும், பேரறிஞர் அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுதான் முதலமைச்சர்களாக பதவி வகித்தனர்.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதுபோலவே 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை அரியணையில் ஏற்றிய பேரறிஞர் அண்ணாவும் மேலவையின் உறுப்பினராக நியமினம் பெற்றே முதல்வராக பொறுப்பேற்றார். பிற்காலத்தில் முதல்வராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆரும் தொடக்கக் காலத்தில் மேலவை உறுப்பினராக இருந்தவர்தான்.
இந்தியா முழுவதும் ஒரு சில மாநிலங்கள் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் மேலவை என்பது நடைமுறையில் உள்ளது. பாராளுமன்றத்திலும்கூட மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மாநிலங்களவை இருப்பதை நாம் அறிவோம். அதுவும் ஒரு மேலவைதான். நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்படியான இரு அவைகள் நடைமுறையில் இருக்கின்றன. நேரடியாக உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்து அனுப்புகின்ற அவை ஒன்று. பல்வேறு தரப்பினரை பிரதிநிதித்துவம் செய்வதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்படுகிற மேலவைகள் மற்றொன்று. அமெரிக்காவில் இப்படி இரு அவைகள் இருந்தபோதிலும், அந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் நேரடியாக தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிற நிலை உள்ளது. அத்தகைய நடைமுறை உள்ள நாடுகள் மிகக்குறைவுதான்.
தமிழகத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த சட்டமேலவையானது பல்வேறு சிறப்பு வாய்ந்த விவாதங்கள் நடைபெற்ற பெருமைக்கு உரியதாகும். பேரவையில் நடைபெற்ற விவாதங்களை விடவும், மேலான தரப்பில் சட்டமேலவை விவாதங்கள் அமைந்திருந்ததை நாம் அறிய முடிகிறது. கட்சிகள் காரசாரமாக மோதிக்கொள்ளும் சட்டப்பேரவையை போலல்லாது நயதக்க நாகரீகத்தை பேணுகிற அறிவார்ந்த விவாதங்களை நடத்துகிற மன்றமாக மேலவை விளங்கியது. இதை சுட்டிக்காட்டுவதற்குத்தான் பேரவையையும், மேலவையையும் ‘கப் அண்டு சாசர்’ என்ற உதாரணத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் பயன்படுத்தினார்கள். கப்பிலே இருக்கும் தேனீர் சூடாக இருந்தால் அதை ஆற்றி குடிப்பதற்கு எப்படி சாசரைப் பயன்படுத்துகிறோமோ அப்படி சூடு பறக்கும் விவாதங்கள் நடைபெறும் பேரவையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்களை ஆற, அமர விவாதிக்கும் இடமாக மேலவை விளங்குகிறது என்ற பொருளில்தான் அவர் அப்படி கூறினார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மேலவை எந்தவித வலுவான காரணமுமின்றி எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் 1986ஆம் ஆண்டில் திடீரென கலைக்கப்பட்டது.
மேலவை கலைக்கப்பட்டதற்கான காரணத்தை அறியும்போது அதை மீண்டும் கொண்டுவர வேண்டிய அவசியத்தை நாம் உணரலாம். 1984ஆம் ஆண்டு ஈழப் பிரச்சனையை முன்வைத்து அன்று எதிர்க்கட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். அதன்பிறகு கலைஞர் அவர்கள் மேலவைக்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் மேலவை உறுப்பினராக பதவி ஏற்றார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் மேலவையையே கலைக்கின்ற முடிவுக்கு வந்தார் என்பது அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும். அன்று சமூகத்தின் பல தரப்பினரும் வேண்டாம் என்று சொல்லியும்கூட கேட்காமல் எம்.ஜி.ஆர். அவர்கள் விடாப்பிடியாக மேலவையை கலைக்கின்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். 1986ஆம் ஆண்டு மே மாதத்தில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்துக்கு அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். அப்போது மத்திய அரசோடு இணக்கமான உறவை கொண்டிருந்த காரணத்தால் மிக விரைவாக அந்த சட்டத்துக்கான ஒப்புதலை எம்.ஜி.ஆரால் பெறமுடிந்தது. 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழக சட்டமேலவை கலைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். எடுத்த முடிவை மாற்றுவதில் உறுதியாக இருந்த தி.மு.க. 1989ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக சட்டப்பேரவையில் அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மீண்டும் சட்டமேலவையை உருவாக்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அப்போது இருந்த மத்திய அரசு நிலையற்றதாக இருந்த காரணத்தினால் தமிழக அரசின் தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் பெறமுடியவில்லை. 1990ஆம் ஆண்டு மே மாதத்தில் மாநிலங்களவை அதற்கான ஒப்புதலை வழங்கியது. அதன்பிறகு பாராளுமன்றத்துக்கு அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்டது. அதனிடையில் தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டுமென்று இங்கிருந்த எதிர்க்கட்சியினர் நெருக்குதல் கொடுத்த காரணத்தாலும், அவர்களுக்கு ஏற்ப ஆட்சியாளர்கள் அங்கே பொறுப்பேற்ற காரணத்தாலும் அந்தத் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. சட்டமேலவையை கொண்டு வரவேண்டும் என்கிற தீர்மானத்தை ரத்து செய்து ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.
அ.தி.மு.க. ஆட்சியை இழந்து தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது இருந்த மத்திய அமைச்சரவை இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவது என்று முடிவெடுத்தும்கூட அதில் காலதாமதம் நேர்ந்து வந்தது. தி.மு.க. ஆட்சியிலிருந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசு இதுபற்றி சாதகமான முடிவெதையும் எடுக்கவில்லை. 2001ல் தி.மு.க. ஆட்சி முடிவுற்று அ.தி.மு.க. மீண்டும் பதவிக்கு வந்த பிறகு வழக்கம்போல மேலவை தேவையில்லை என்று தீர்மானம் ஒன்றை அது சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இப்படி மாறி, மாறி தீர்மானங்கள் போடப்பட்டதில் சட்டமேலவை வராமலேயே போய்விட்டது.
தற்போது சட்டமேலவை வேண்டாமென்று கூறுகிற கட்சிகள் அதற்கு தகுதியான காரணங்கள் எதையும் சுட்டிக்காட்டவில்லை. இடதுசாரிக் கட்சிகள் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இப்படியான மேலவைகள் இல்லை என்பதை ஒரு காரணமாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சட்டமேலவை கலைக்கப்பட்ட கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் சட்டப்பேரவை நன்றாகத்தானே இயங்கி வருகிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். மேலவை உருவாக்கினால் அதனால் கூடுதல் செலவு ஏற்படுமே தவிர, வேறு எந்த பயனும் வராது என்றும் அவர் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் காரணங்களை நாம் ஏற்க முடியாது. சட்டப்பேரவையே இல்லை என்றால்கூட அரசாங்கத்தை நடத்தலாம்தான். இதுவும்கூட அனாவசிய செலவு என்று சொல்லி விடலாம். செலவை வைத்து ஜனநாயகத்தை மதிப்பிட முடியாது. மேலவை என்பது ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தின் வெளிப்பாடு ஆகும். எனவே, அதை மறுப்பது சரியல்ல. மேலவை வேண்டாமென்று ரத்து செய்த அ.தி.மு.க.வினருக்கு சொல்வதற்கென்று எந்தக் காரணமும் இல்லை என்பதே உண்மை.
இந்தியாவெங்கும் இருக்கின்ற சட்டப்பேரவைகளிலும், பாராளுமன்றத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு உள்ளது. இப்போது அதில் கூடுதலாக மகளிருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய இடஒதுக்கீடு சட்டமேலவையிலோ, மாநிலங்களவையிலோ கிடையாது. சட்டமேலவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 1937ஆம் ஆண்டில் 54 உறுப்பினர்களைக் கொண்டதாக அது விளங்கியது என்று பார்த்தோம். அந்த 54 உறுப்பினர்களில் 35 இடங்கள் பொது இடங்களாக வைக்கப்பட்டிருந்தன. ஏழு இடங்கள் முஸ்லீம்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஐரோப்பியர்களுக்கு ஒரு இடமும், இந்திய கிறிஸ்தவர்களுக்கு மூன்று இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. எட்டு உறுப்பினர்கள் முதல் பத்து உறுப்பினர்கள் வரை ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். 52ஆம் ஆண்டில்தான் இந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. தற்போது மேலவைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது. மகளிர் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படும் இந்த நேரத்தில் மேலவைகளில் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டியது மிகமிக அவசியமாகும்.
      மேலவையைக் கொண்டுவருவதென்று முடிவெடுத்து அதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மேலவையில் ஆதிதிராவிடர்களுக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என நான் வலியுறுத்திப் பேசினேன். நேரில் முதல்வரை சந்தித்தபோதும் அதை எங்கள் கட்சி சார்பில் வலியுறுத்தினோம். முதலில் மேலவைக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கட்டும் என முதல்வர் கூறினார். இப்போது ஒப்புதல் கிடைத்து அதற்கான தேர்தலும் நடக்க இருக்கிறது. ஏதேதோ காரணங்களைச் சொல்லி மேலவையை எதிர்த்த கட்சிகள் இதைப் பற்றி மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் ? 

Saturday, October 30, 2010

பெயரில்தான் எல்லாமே இருக்கிறது - கிறித்துதாசு காந்தி இ. ஆ. ப



‘‘தமிழகத்திலிருந்து சுடர் வாங்கி, தமிழ் வேந்தராய் இப்பொழுது தமிழ் யாகத்தை மேற்கொண்டு ஒரு தமிழ் முனியாக உருவாகியிருக்கும் நமது திருமாவளவன் அவர்களே, இந்த தாய்மண்ணை அலங்கரிக்க வந்திருக்கிற மேடை பெரியோர்களே, தாய்மண்ணின் ஆலும் வேருமாக குடியிருக்கும் சுற்றத்தாரே வணக்கம். இந்த தமிழ்முனி திருமாவளவன் அவர்கள், தமிழ்ப் பெயர் மாற்றத்திற்காக ஒரு இயக்கம் நடத்துவது தேவைதானா? பெற்றோர் இட்ட பெயரையே மாற்றச் சொல்லலாமா? மனித உணர்வுகளுக்கு இது மதிப்பு கொடுக்கும் செயாலா? என்று கேள்வி கேட்பவர்களும் இருருக்கிறார்கள். பெற்றோர் இட்ட பெயரை மாற்றுவது என்பது, உணர்வுகளை மதிக்காத செயல் என்றால், இப்பொழுது தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். கருப்பு சாமியின் மகன் வெள்ளையன் என்று இருந்தால், அவன் தன் பெயரை குறிப்பதற்காக க.வெள்ளையன் என்று போட்டுக் கொள்ளலாம். ஆனால், அதை எப்படி போட்டுக் கொள்கிறார்கள் என்றால் கருப்புசாமி என்பதை ‘‘K’ ’ என ஆங்கிலத்தில் போட்டு ‘K’ .வெள்ளையன் என்று எழுதிக்கொள்கிறாரக்ள். அதற்கு மேலே ஒருபடி போய், ‘‘K’ வை தமிழ்படுத்தி, கே.வெள்ளையன் என்று எழுதுகிறார்கள். அப்பா பெயர் கருப்புசாமி என்று ‘க’ போட்டுக்கொள்ளலாம். ஆனால் கருப்புசாமியை ‘கே’ என்று அழைத்தால், இந்த ‘கே’யில் என்னென்ன பெயர் இருக்கிறது. இந்த ‘கே’வில், கேப்மாரி என்றும், கேனையன் என்றும் இருக்கிறது. என்னுடைய தந்தை இட்ட பெயரை மாற்றுவது என்னுடைய உணர்வை அடிக்கிறது என்று சொன்னால், அப்பாவின் அடையாளத்தையே நீ மாற்றிக் காட்டுகிறாயே உன்னை எந்த கிழிந்த செருப்பை வைத்து அடிப்பது?
பெயர் சூட்டல் என்பதை ஒரு பெரிய இயக்கமாக நடத்த வேண்டுமா என்று கேட்கிறார்கள். ஆம்! இயக்கமாக நடத்த வேண்டிய தேவை இந்த நாட்டில் இருக்கிறது. ஏனென்றால் இதற்கு மாறான செயல்பாடுகள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய சொந்த பந்தங்களுக்கு, பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது என்றால், ‘ஏகலட்சம்’ என்ற ஒரு பெயரை வைக்கிறார்கள். ஏகலட்சம் என்ற பெயரை நம்மிடையே காட்டுவதற்காக சில இயக்கங்கள் இருக்கின்றன. டிக்ஸ்னரி போடுகின்றார்கள். பெயருக்கு டிக்ஸ்னரி போடுகின்றார்கள். இது ஒரு மாற்று இயக்கம். எதிரியக்கம் இங்கே நடைபெறுகிறது. சரி எண்கணிதத்திலாவது நீ நம்பிக்கை வைத்திருந்தால் அதிலாவது நீ தமிழில் அடிப்படையாக போகலாம் இல்லையா? ஒருத்தரின் பெயர் ‘முருகன்’ என்றிருந்தால், அவன் எண்கணித அடிப்படையில் இந்த பெயரில், எனக்கு எண்ணிக்கை சரியாக வரவில்லை அதனால் இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் நான் பெயரை மாற்ற வேண்டும் என்று முருகன் என்ற தமிழ்ப்பெயரை Murugan என்று ஆங்கிலத்தில் எழுதி, என்னுடைய பெயருக்கு ஏழு எழுத்துக்கள் இருக்கின்றன என்று அவன் தன்னுடைய மூளையில் ஏற்றிக்கொள்கிறான். 6 எண்ணிக்கை எனக்கு வரவேண்டும் என்று அவன் எண்கணிதத்தை நம்பி, அவன் அந்த ஏழு எழுத்தைMurgan என்று எழுதிக்கொண்டு எண்கணிதத்தில் இனிமேல் எனக்கு எதிர்காலம் செழிக்கும் என்று நம்பிக் கொள்கிறான். எண்கணித முறைப்படி முருகன் என்ற பெயரை ஆறு எழுத்தில் எழுத வேண்டும் என்று விரும்பினால் திருமுருகன் என்று மாற்றிக் கொள்ளலாமே! இதுதான் இந்த தமிழ் இயக்கத்தினுடைய தேவை. அப்பாவுடைய அடையாளத்தை மாற்றுவது, ஊரினுடைய அடையாளத்தை மாற்றுவது என்பது தொடர்கிறது.
ஆம்பூர் பக்கத்தில் கே.வி.குப்பம் இருக்கிறது. இந்த கே.வி.குப்பம் என்பது கீழ்வைத்தியநாதன் குப்பம் என்பதாகும். அதை இவ்வளவு நீட்டி முழக்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்பதற்காக சுருக்கமாக கீ.வை.குப்பம் என்று மாற்றியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு ரி.க்ஷி.குப்பம் என்று மாறி, அதை தமிழில் கே.வி.குப்பம் என்று எழுதுகிறார்கள். இங்கே உள்ள மக்கள் எல்லாம் பஞ்சபரதேசிகளாக இருந்து, அவன் அய்யோ எனக்கு ஏதாவது கொடுங்க என்று கேவி, கேவி இருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு கே.வி.குப்பம் என்று பெயர் வந்தது என்றும் விளக்கமளித்தாலும் அளிப்பார்கள்.
ரங்கூனில் இருந்து திரும்பிய ஒரு ரங்கனுடைய மகன் சண்முகத்தின் பெயரில் ஒரு வீதி அமைத்தோம் என்றால், அதை இவர்கள் ஆர்.ஆர்.எஸ்.வீதி என்று போட்டு, ஆர்.எஸ்.எஸ்.வீதி என்றாக்கி, அது எங்களுக்குத்தான் சொந்தம் என்று ஒரு இயக்கம் உரிமை கொண்டாடினாலும் வியப்பில்லை. இதிலெல்லாம் மிகப்பெரிய விஷயங்கள் இருக்கின்றன. உரிமைகள் எல்லாம் இருக்கின்றன. பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதிலேதான் உரிமை இருக்கிறது. மண்ணுரிமை இருக்கிறது. தாய்மண் உரிமையெல்லாம் இருக்கிறது.
எனக்கு உணர்வுகள் இருக்கின்றன என்று உணர்வுகளை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் அது உருபடாது. நிறுவனமயமாகவேண்டும். இதுபோன்ற ஒரு புத்தகம் ஒன்று வருகிறது என்றால், அது நிறுவனமாகிறது. அறக்கட்டளை பிறக்கிறது என்றால், அதற்குள்ளே இருக்கின்ற கருத்துக்கள் எல்லாம் ஒரு நிறுவனமாகிறது. இந்த நிறுவனமாக்குதல் என்றால் என்ன? நாம் இன்னும் தீவிரமாக போக வேண்டியிருக்கிறது. நம்முடைய இயக்கங்களில் எல்லாம் உணர்வுள்ளவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். நல்ல உணர்வுகள் இருக்கின்றன. நல்ல படைப்பாற்றல் இருக்கின்றன. எல்லாவிதமான ஆற்றல்களும் நம்மிடையே இருக்கின்றன. அது இன்னும் கொஞ்சம் நிறுவனமாவது என்ன என்கிற கருத்தோட்டத்தில் நாம் போகிறோம் என்றால், இன்னும் நாம் வளர்ந்திருப்போம். எப்படி இந்த பெயர்ச்சூட்டல் என்பதும், ஒரு நிறுவனமாகி இருக்கிறதோ அதுபோல நமது மக்களின் விடுதலைக்கான நம்முடைய எல்லா உணர்வுகளும் நிறுவன வடிவம் எடுக்க வேண்டும். அரசு வடிவம் எடுத்திருப்பது ஒரு நிறுவன வடிவம். இதற்குமேலே போய் இந்த நிறுவனமாவது என்ன என்பதை இந்த திட்டங்களுக்குள் கொண்டுவர வேண்டும்.
கல்வி வேண்டும் என்கிற ஒரு தேவையை, கல்வியைத் தா, கல்வியைத் தா என்கிற ஒரு கூவலாக மட்டும் வைக்காமல் ஒரு நிறுவனமாக, கல்வி நிறுவனமாக வர வேண்டும் என்ற கோரிக்கையை மாற்றி, அதனைப் பெற வேண்டும். வெறும் கல்வியை மட்டும் தான என்றா, சாதிக்கு ஒரு கல்விக்கூடம் அமைத்துக் கொண்டு, நான் உனக்கு கல்வியைத் தருகிறேன் நீ இங்கே வா என்று அழைக்கின்ற காலமாக போகும். கல்வி நிறுவனமும் நமக்காக வர வேண்டும். என்னை வெறும் பயிலுனராக வைக்கிறார்களே, என்னை பயிற்சியாளராகவும் வை என்று நம்முடைய கோரிக்கையை மாற்ற வேண்டும். எனக்கு பயிற்சி வேண்டும் என்கிற கோரிக்கையை மட்டும் வைக்கக்கூடாது. எனக்கு பயிற்சி நிறுவனம் வேண்டும் என்று கேட்கலாம். கணினி பயிற்சி மட்டும் எனக்கு கற்றுக்கொடு என்று கேட்கக்கூடாது. ஆகவே, நாம் நிறுவனமாக கேட்க வேண்டும். கட்டிய வீடு வேண்டும் என்று கேட்கக்கூடாது. வீடு கட்டும் நிறுவனமாக வேண்டும். வீடு கட்டும் நிறுவனம் என்றால் காண்ட்ராக்டர் ஆக வேண்டும். இதுபோல நம்முடைய தேவையை நிறுவனமாக எப்படி நாம் கோரவேண்டும் என்கிற ஒரு சிந்தனையையும் நாம் சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.

(2005 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் தமிழ்ப் பெயர் ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரை .)

திருமாவளவன் தமிழர்களின் தலைவராவார்! - தென்கச்சி சுவாமிநாதன்



' இன்று ஒரு தகவல் ' நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று விளங்கிய தென்கச்சி சுவாமிநாதன் 2005 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் தமிழ்ப் பெயர் ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரை .

அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இந்த அரங்கத்திற்கு முதலில் வந்து கடைசியாக பேசுகிறேன். படிக்கும் காலத்திருந்தே எப்பொழுதும் நான் கடைசிதான். இந்த அரசியல் ஈடுபாடு எனக்கு இல்லையென்றாலும்கூட, நான் மிகவும் நேசிக்கின்ற ஒரு அரசியல் தலைவர் திருமாவளவன் அவர்கள்தான். ஏனென்றால் அவர் அரசியல் வாதி மாதிரி இல்லை. எப்படியென்றால் நம்முடைய சனாதிபதி அப்துல்கலாமை தில்லி சென்றபோது ஒரு வடநாட்டு பத்திரிகை, இப்போதுதான் சனாதிபதி மாளிகைக்குள் முதல் முறையாக ஒரு மனிதன் புகுந்திருக்கிறார். அவர் சனாதி பதியாகாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு என்று எழுதி இருந்தார்களாம். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இப்பொழுதுதான் தமிழக அரசியலில் திருமாவளவன் என்கிற மனிதன் புகுந்திருக்கிறார். அவர் அரசியல்வாதி யாகாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு.
சமீபத்தில் போன மாதம் நான் லண்டனில் நடைபெற்ற தமிழர் விழாவில் கலந்துக்கொள்ள சென்றிருந்தேன். அங்கே உள்ள தமிழர்கள், எப்படி இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்? என்று கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று சொன்னேன். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழர்களை தமிழர்களுக்கு அடையாளம் காட்டுகிற தலைவர்கள் இரண்டுபேர்தான் இருக்கிறார்கள். யார் என்று நான் கேட்டேன். ஒருவர் திருமாவளவன். மற்றவர் வைகோ என்றார்கள். ஏன் மற்றவர்கள் எல்லாம் சரியாக அடையாளம் காட்டவில்லையா? என்றேன். அவ்வப்போது அடையாளம் காட்டுகிறார்கள். என்று லண்டனில் வசிக்கும் தமிழர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எக்கு மிகவும் பெருமை.
சில நாட்களுக்கு முன்பு திருமாவளவன் அவர்களை பத்திரிகை ஒன்றுக்காக சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது பேசிக்கொண்டிருந்தோம். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலேயே வெளிநாட்டிலிருந்து ஆங்கில அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு தொலைபேசியில் பேசினாராம். யாராவது இந்திய தலைவர்கள் இருந்தால் பேசச் சொல்லுங்கள். உடனே பேச வேண்டும். ஒரு முக்கியமான செய்தியை சொல்ல வேண்டும் என்று. அப்பொழுது இந்தியாவில் நள்ளிரவு நேரம். அங்கே பகல்.
இந்தியத் தலைவர்கள் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்களாம். இல்லை இல்லை யாராவது ஒருவராவது விழித்துக் கொண்டிருக்கிறார்களா பாருங்கள். மிக முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் இந்திய தலைவர்களுக்கு என்று சொன்னாராம். அப்பொழுது பார்த்தால் அண்ணல் அம்பேத்கர் மட்டும்தான் விழித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு நூல் நிலையத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்களாம். அப்படி என்றால் அவரை உடனடியாக பேசச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே அம்பேத்கர் பேசியிருக்கிறார். பேசும்போது அந்த ஆங்கில அதிகாரி எல்லா தலைவர்களும் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறீர்களே, என்று கேட்டாராம். அதற்கு அம்பேத்கர் மற்ற தலைவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுடைய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மக்கள் தூக்கிக்கொண்டிருப்பதால் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களை எப்படி விழிக்க வைப்பது என்பதுதான் என்னுடைய சிந்தனை என்று சொன்னாராம்.
இப்பொழுது அம்பேத்கர் இருந்திருந்தால் கொஞ்சம் நிம்மதியாக தூங்கியிருப்பார். ஏனென்றால் திருமாவளவன் இருக்கிறார். இன்னொரு கருத்தையும் பேசினோம். சட்டமேதை அம்பேத்கர் சொன்னது என்னவென்றாரர், எவ்வளவு தான் மோசமான ஒரு சட்டம் இருந்தாலும், அதை கையாளுபவர்கள் நல்லவராக இருந்தால், அதன் விளைவு நல்லபடியாக இருக்கும். எவ்வளவு நல்லவிதமான சட்டம் இருந்தாலும் கையாளுபவர்கள் மோசமாக இருந்தால் விளைவு மோசமாகத்தான் இருக்கும் என்ற கருத்தை சொன்னார். இந்த நிமிடத்திற்கு அது எவ்வளவு பொருத்தம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். அப்படிப்பட்ட தலைவருடைய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. எங்களுடைய அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அவருடைய படத்திற்கு மாலை போடுவது வழக்கம். எல்லா அரசாங்க அலுவலகத்திலும் அந்த பழக்கம் உண்டு. அப்படி போன ஆண்டு போடும்போது பெரிய உயரமான இடத்தில் அவருடைய படம் இருந்தது. அப்பொழுது அங்கே ஏணி வைத்து அதில் ஏறி அதிகாரிகள் மாலைபோட்டு விட்டு வந்தார்கள். அதன்பிறகு என்னை பேச சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன், அம்பேத்கர் படத்துக்கு மாலை போடுகிற தகுதி வேண்டுமானால், பல படிகள் கடக்க வேண்டியிருக்கிறது என்றேன். இது ஒரு சம்பவம். இந்த மேடையில் எனக்கு வேடிக்கையாக பேச வேண்டிய நேரம் இல்லை. எல்லோரும் உணர்ச்சிகரமாக பேச வேண்டிய நேரம்.
இரண்டாவது திருமாளவன் அவர்கள் எவ்வளவு அவசரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் துணிமணி கூட எடுத்து வைக்கவில்லை. விமான நிலையத்திற்கு செல்லவேண்டிய அவசரம். அதனால், 5 நிமிடத்திற்குள் சுருக்கமாக என்னுடைய கருத்துக்களை முடித்துக்கொள்வது தான் நாகரீகம். நான் எப்போதும் எந்தக் கூட்டத்தில் எவ்வளவு பேச வேண்டும் என்பதை முடிவு செய்வேன். இப்படித்தான் ஒரு கூட்டத்தில் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று கேட்டேன். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள். நாங்கள் 5 நிமிடங்களுக்கு மேல் உட்கார மாட்டோம் என்று சொன்னார்கள். அதேபோல திருமாவளவன் அவர்களும் சொல்லாமல் சொல்லிவிட்டார். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள். நான் 7 மணிக்கெல்லாம் சென்று விடுவேன் என்று. நம்முடைய இளைஞர்களை வழிநடத்துவதற்கு தகுதியான தலைவர் மிகவும் அவசியம்.
ஏனென்றால், தமிழகத்தில் தான் தற்கொலை விகிதம் அதிகம். உலகத்திலே தமிழகத்தில் தான் இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னபோது, 13 இளைஞர்களும், கலைஞரை நள்ளிரவு கைது செய்த போது 43 இளைஞர்களும் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள். இந்திரா காந்தி சுட்டுக் கொன்றபோது 17 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். தமிழ் நாட்டிலே 15 பேர் தற்கொலை. ஒருத்தர் ஒரிசாலிவிலே, ஒருத்தல் மலேசியாவிலே.
முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், ஒரிசாவில் மலேசியாவில் யார் தற்கொலை செய்தார்கள் என்று விசாரித்தாராம். அவர்கள் இங்கிருந்து பிழைக்கச் சென்றவர்களாம். அப்படி இருக்கிறது தமிழக இளைஞர்களின் இன்றைய நிலை? ஏனென்றால் நல்ல வழி காட்டுதல் இல்லை. எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றவுடன் 17 பேர் இறந்து விட்டனர். 19 பேர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினார்கள். உண்மையிலேயே எம்.ஜி.ஆர். இறந்த போது 30 இளைஞர்கள் இறந்து விட்டார்கள். இதுவெல்லாம் தமிழகத்தினுடைய வரலாறு. அப்படி இருக்கிறது தமிழக இளைஞர்களின் நிலைமை.
ஆந்திராவில் என்.டி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டபோது அந்த ஊரில் யாரும் சாகவில்லை. தமிழ்நாட்டில் ஒருவன் இறந்துபோனான். இப்படி இருக்கும்போது முன்னாள் துணை வேந்தர் அவர்கள் விளக்கம் சொல்கிறார். இதற்கு பலகீனம் ஒரு காரணம். பிரச்சார மயக்கம் ஒரு காரணம். தலைமை வழிபாடு ஒரு காரணம் என்று அவர் பல காரணங்களை சொல்கிறார். இது எதற்கு என்றால், தமிழ் நாட்டில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தகுதியான தலைவர் வேண்டும் என்பது நல்லவர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றக் கூடிய அளவில் உருவாகியிருப்பவர் திருமாவளவன் அவர்கள் என்பதில் எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அது மட்டுமல்ல தலித் மக்களுக்கு வாழ்ந்துகாட்டுகிறவர். வழிகாட்டுவதற்கு நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். வாழ்ந்து காட்டுகிறவர்கள் ஒருத்தர் அல்லது இரண்டு பேர்தான். அவர் தலித் மக்களுக்கு மட்டும் வழிகாட்டுகிற தலைவராக இருக்கிறார். கூடிய விரைவில் தமிழக மக்களுக்கே வழிகாட்டுகிற தலைவராக மாற வேண்டும்.
ஏனென்றால் நல்லவர்களுடைய வகையிலே தலைமை வரவேண்டும் என்பது நல்லவர்களின் எதிர்பார்ப்பு. இவையெல்லாம் லண்டனில் உள்ள தமிழர்களோடு பகிர்ந்துக் கொண்ட கருத்துக்கள். இது இலண்டன் வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதைத்தான் நான் சொல்ல வந்தேன். அப்படி இருக்கும் போது மதம், சாதி என்று சொல்கிறார்களே, சாதி, மதம் ஒன்றும் பெரிதல்ல என்று பேசிக்கொண்டிருந்தோம். சாதியெல்லாம் உள்ளுக்குள் லேசாக எடுத்து விடலாம். மத உணர்வு என்பது? அதற்கு ஒரு கதை சொன்னேன்.
மந்திரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு வந்தார். மூன்று மதத் தலைவர்களும் வந்தார்களாம். ஒருவர் பெருமாள் கோவில் பூசாரி, ஒரு ஃபாதர், பள்ளி வாசலிலிருந்து ஒரு இமாம். முன்று பேரும் எங்க கோயிலுக்கு வாங்க, எங்க கோயிலுக்கு வாங்க என்று மந்திரியை பிடித்து இழுக்கிறார்கள். அதற்கு அவருடைய பி.ஏ. சொன்னாராம் இதோபார் மூன்று பேரில் யாருடன் சென்றாலும், மற்ற இரண்டு பேரின் ஓட்டு உனக்கு கிடைக்காது. ஆகவே, மயக்கம் வந்ததுபோல் கீழே விழுந்து விடு. நான் மந்திரிக்கு மயக்கம் வந்துவிட்டது என்று சொல்லி வீட்டிற்கு தூக்கிச் செல்கிறேன். இதுதான் தப்பிப்பதற்கு வழி என்றாராம். அப்படி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒரு புலி வந்துவிட்டது. புலி வந்ததும் கூப்பிட வந்தவர்கள் ஓடி விட்டார்கள். கூட்டம் கலைந்துவிட்டது. மந்திரியும், பி.ஏ.வும் உள்ளே நுழைந்து பார்த்தால் ஸ்டேரிங்கில் கைப்பட்டு சத்தம் கேட்டதும் புலி ஓடிவிட்டது. இவர்கள் இரண்டுபேரும் இறங்கிவந்து பார்க்கும்போது கூப்பிட வந்தவர்கள் யாரும் இல்லை. புலி போய்விட்டது எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிட்டால் யாரும் வரவில்லை. எல்லோரும் ஓடி ஒளிந்து விட்டார்கள். சரி நாமாவது போவோம் என்று மந்திரியும், பி.ஏ.வும் சென்று ர்ச் கதவை திறந்து பார்த்தார்களாம். மெதுவாக பெருமாள் கோவில் பூசாரி அங்கிருந்து வெளியில் வருகிறாராம். பெருமாள் கோவிலை திறந்தால் இமாம் வருகிறாராம். பயந்துக் கொண்டே எங்கே போய்விட்டது அந்த மத உணர்வெல்லாம்?
அது அப்படிதான் மதம் என்பது ஒரு பாதுகாப்பாக உபயோகப்படுத்தக்கூடிய ஒரு விஷயம். ஒரு சிறுவனை, அதோ போகிறாரே அவர் யார் என்று கேட்டால் எங்க அப்பாதான் என்று சொல்கிறான். இதோ போகிறாரே அவர் யார் என்றால், இவரும் எங்க அப்பா என்றா சொல்லுவான்? அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் கடவுள் விசயத்தில்.
ஒரு தெருவில் இரண்டு பேர் ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்களாம். எல்லோரும் கூடி வேடிக்கை பார்க்கிறார்கள். ஒரு சின்ன பையன் ஒதுங்கி நின்றுக்கொண்டிருக்கிறான். அவனிடம் அவங்க இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்களே என்ன சண்டை? என்று கேட்டார்களாம். அதற்கு அவன், எங்க அப்பாவுக்கும் இன்னொருத்தருக்கும் சண்டை நடக்கிறது. அதை எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள். நானும் வேடிக்கை பார்க்கிறேன் என்று சொன்னான். சரிப்பா அந்த இரண்டு பேரில் யார் உன்னுடைய அப்பா? என்று கேட்டுள்ளனர். சண்டையே அதற்காகத்தான் நடக்கிறது என்றானாம். நம் மதவாதிகள் போட்டுக் கொள்கிற சண்டைக்கும், அதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இதே சண்டைதான். அப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கிறது உலகம். ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் தமிழ் நாட்டில் உருவாகி வருகிறார். நாமெல்லாம் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு விஷயம். கூடியசீக்கிரம் அவர் எல்லோருக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தமிழக தலைவராக உருவாவார் என்று சொல்லி என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, October 29, 2010

அலி ஆகி ஆடி உண்பார்



திரு க ப அறவாணன் அவர்கள் தொகுத்து வெளியிட்டிருக்கும் அறநூல்கள் களஞ்சியத்தைப் பார்க்க நேர்ந்தது. அதைப் புரட்டிக்கொண்டிருந்தபோது நாலடியாரில் இருக்கும் சில பாடல்களை வாசித்தேன். அதன் பின்னர் இணையத்தில் இருக்கும் பிரதியைப் படித்தேன். ஒரு பாடல் கவனத்தை ஈர்த்தது:


"செம்மை ஒன்று இன்றி , சிறியார் சினத்தர் ஆய்
கொம்மை வரி முலையாள் தோள் மரீ இ - உம்மை 
வழியால் பிறர் மனைமேல் சென்றாரே - இம்மை 
அலி ஆகி ஆடி உண்பார்
" Those who in a former state without any regard to right, becoming associates of the mean ,enjoyed the embraces of beautiful women , and by violence approached their neighbor's wife, in this state became eunuchs and dancing shall earn their bread " என்பது ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு. 
அலிகள் ஆடிப் பிழைத்ததாக இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஆடிப் பிழைத்தல் அவ்வளவு ஏளனமாகச் சொல்லப்பட்டது ஏன் ? அலிகள் நடனக் கலைஞர்களாக  இருந்தார்களா ? அல்லது நாடோடிகளாகத் தெருக்களில் நடனம் ஆடி ஜீவித்தார்களா ? வேறு குறிப்புகள் எங்கேனும் இருக்கின்றனவா ? 
அன்புடன் 
-ரவிக்குமார் 

கலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்




    தமிழக சட்டப்பேரவை - 2008 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள். அமைச்சர் ஒருவர் பற்றிய குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் எடுத்துரைக்கிறார்.  இறுக்கமான சூழல்.  முதல்வர் கலைஞர் பதிலளிக்கிறார்.  அந்தச் சூழலிலும்கூட அவருக்குத் திருக்குறள் ஞாபகம் "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங்கெடும்" என்ற குறளை எடுத்துச்சொல்லி அந்த அமைச்சர் பதவி விலகல் கடிதம் கொடுத்திருப்பதை அவைக்கு அறிவிக்கிறார்.  திருக்குறள் என்பது கலைஞரைப் பொருத்தவரை ஒரு அங்கம், இருளிலும் அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிழல்.

    நான் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்று அவையில் ஆற்றிய முதல் உரையின்போது திருக்குறளுக்குக் கலைஞர் எழுதியிருக்கும் உரையைக் குறிப்பிட்டுப் பேசினேன்.  புகழுரைகளையே எருவாய்கொண்டு தழைக்கும் இன்றைய அரசியல் சூழலில் எனது பேச்சும்கூட அதன் ஒரு பகுதியாய் "மற்றவர்களால்" புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம்.  ஆனால் நான் பேசியது எனது ஆய்வின் அடிப்படையிலான அறிவிப்பேயன்றி, பாராட்டு மொழியல்ல. 

    நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் திருக்குறள் உரைகளைத் தேடிப்பிடித்துப் படித்து வருகிறேன். திருக்குறளுக்கு ஏராளமானபேர் உரை எழுதியுள்ளளனர்.  மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைப்போல குறளுக்கு உரை எழுதுகிறேன் எனத் தனது போதாமையைக் காட்டிக்கொண்டவர்களும் உண்டு.  திருக்குறள் உரை பற்றிய எனது ஆர்வம் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய முற்றுப்பெறாத உரையைப் படித்த பிறகு உண்டானது.  அயோத்திதாசப் பண்டிதர், தான் நடத்தி வந்த தமிழன் இதழில் (1907- 1914) திரிக்குறளுக்கு (திருக்குறள் என்பதை அயோத்திதாசப் பண்டிதர் திரிக்குறள் என்றே குறிப்பிட்டுள்ளார்) "தெரிந்து தெளிதல்"  என்ற அதிகாரம் வரை உரை எழுதியுள்ளார். தற்போதைய பதிப்புகளில் ஐம்பத்தொன்றாம் அதிகாரமாக இடம்பெறும் அது, அயோத்திதாசரின் கணக்கில் ஐம்பத்தைந்தாம் அதிகாரமாக இடம்பெற்றுள்ளது.  1914 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அவர் இறக்கும் வரை தொடர்ந்து வெளிவந்த தமிழன் வார இதழில் அவரது திரிக்குறள் உரையும் பிரசுரமாகிவந்தது.  தமிழ் பெளத்த நோக்கில் அவர் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரையைப் படித்தபிறகு, இதுவரை தமிழில் வெளிவந்துள்ள உரைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வம் எனக்குள் உண்டானது.  பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து இந்திய அறிவுச் சூழலில் இந்துத்துவம் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம் அது.  திருக்குறள் உரைகளில் எவ்வாறு சமயச் சாயம் ஏறியிருக்கிறது  என்பதைப் பார்ப்பது எனக்கு சுவாரசியமான விளையாட்டாக இருந்தது.  அந்தச் சூழலில்தான் நான் கலைஞரின் உரையை வாசித்தேன்.  அவரது கருத்தியலின் ஆழத்தில், சமய வெறியோடு சமரசம் செய்துகொள்ளாத பகுத்தறிவின் கங்கு கனன்று கொண்டிருப்பதை அது எனக்குக் காட்டியது.  அவரது பேச்சில் எரிமலை உமிழ்வாக அவ்வப்போது அந்தக் கனல் வந்து விழுவதுண்டு.  அதனால் அவர் அரசியல் தளத்தில் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் ஏராளம்.  ஆனால் அந்த இடையூறுகளைஎல்லாம் தாண்டி கலைஞரைத் தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவராய் அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது அந்த அடியாழத்து நெருப்புதான்.  கலைஞருக்குள் கனலும் அந்த நெருப்பைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதில் திருக்குறளுக்கு மிக முக்கியமான பங்கிருக்கிறது.

    திருக்குறளுக்கு உரை எழுதுவதை "இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சி" எனக் கலைஞர் குறிப்பிடுகிறார்.  அந்தப் "பொன்னாடையை நெய்வதற்கான" காரணம் எதையும் அவர் கூறவில்லை என்றபோதிலும் திருக்குறளுக்கு இதுவரை எழுதப்பட்டுள்ள உரைகளில் சொல்லப்பட்டுள்ள பொருள்களைத் தாண்டி வேறு பொருளும் இருக்கிறது என்ற எண்ணமே அவரை உந்தியிருக்கிறது.  "குறளில் அவர் (வள்ளுவர்) கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மை நிலையைக் கடைப்பிடித்து" இந்த உரையை எழுதியதாகக் கலைஞர் குறிப்பிடுகிறார்.

    பரிமேலழகர் முதல் மு. வரதராசனார் வரை "கடவுள் வாழ்த்து" என்று குறிப்பிட்டு உரை எழுதிய அதிகாரத்தின் தலைப்பை வழிபாடு என கலைஞர் மாற்றியமைத்துள்ளார்.  "வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்க வைக்க நான் விரும்பவில்லை". என்று அதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார்.  அகர முதல எழுத்தெல்லாம்... எனத் தொடங்கும் முதல் குறளில் வருகின்ற 'ஆதிபகவன்' என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு என்கிறார் பரிமேலழகர்.  அதை 'கடவுள்' என சுருக்கிப் பொருளுரைத்திருக்கிறார் மு.வ. அயோத்திதாசப் பண்டிதரோ அது புத்தபிரானின் நாமத்தைத்தான் குறிக்கிறது என்று வாதிடுகிறார்.  இருளை விலக்கிய சூரியனுக்குப் பகலவனென்னும் காரணப் பெயர் உண்டானதுபோல மக்களுக்குள்ள காம, வெகுளி, மயக்கமெனும் அஞ்ஞான இருளை அகற்றி சாந்தம், ஈகை, அன்பென்னும் மெஞ்ஞான உதயம் செய்வித்தபடியால் புத்தருக்கு 'பகவன்' என்று பெயர்வந்ததாகக் கூறும் அயோத்திதாசர் அதற்கு ஆதாரமாக பாலி மொழி நிகண்டுவில் கூறப்பட்டிருப்பதையும், திருமூலர், இடைக்காட்டு சித்தர், சீத்தலை சாத்தனார், திருத்தக்கதேவர் ஆகியோரின் பாடல்களில் உள்ள ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றார்.  கடவுள் உண்டா? இல்லையா? என்ற கேள்விக்குப்பதில் காண்பது இயலாத காரியம் மட்டுமல்ல அது தேவையற்றதும்கூட என நம்பிய அயோத்திதாசரும்கூட கடவுள் வாழ்த்து என்ற தலைப்பை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை.  அதை 'கடவுள் வாழ்த்து என்னும் புத்தரது சிறப்புப் பாயிரம்'  என்று தனது நோக்கில் மாற்றியமைத்துள்ளார்.  அதே விதமான அணுகுமுறை கலைஞரிடம் தென்படுகிறது.  கலைஞர் இன்னும் ஒருபடி மேலே சென்று கடவுள்வாழ்த்து என்பதையே கைவிட்டு வழிபாடு என்று அதிகாரத் தலைப்பை மாற்றியமைத்திருப்பது திருக்குறளை மதச்சார்பற்ற பிரதியாக மாற்றி அமைக்கும் கலைஞரின் முயற்சிக்கு ஒரு உதாணமாகும்.  அதே நோக்கில் அதன் பத்துக் குறள்களுக்கும் கலைஞர் உரை எழுதியுள்ளர்.

    'அறவாழி அந்தணன்' என்று தொடங்கும் குறளில் உள்ள 'அந்தணன் என்பதற்குப் பொருள் சான்றோர்' எனக் குறிப்பிடுகிறார் கலைஞர்.  அறவாழி என்பது தருமசக்கரத்தைக் குறிக்கும் என்கிறார் அயோத்திதாசர்.  அப்படி ஒரு பொருள் இருப்பதைப் பரிமேலழகரும் ஏற்றுக்கொண்டுள்ளார் எனினும் அறக்கடல் என்றே அவர் பொருள் உரைத்துள்ளார்.  இக்குறளுக்கு தெளிவுரை எழுதியிருக்கும்   மு. வரதராசனார் 'அறவாழி அந்தணன்' என்பதை 'அறக்கடலாக விளங்கும் கடவுள்' என்று குறிப்பிடுகிறார்.  ஆனால் கலைஞரோ அதைச் சான்றோர் என அறிவு நிலையில் வைத்துப் பொருள் கூறியுள்ளளார்.  இது குறளை மத நீக்கம் செய்யும் கலைஞரின் முயற்சிக்கு இன்னொரு உதாரணமாகும்.  திராவிட இயக்கத்தின் அடையாளங்களுள் ஒன்றாய் திருக்குறள் மாற்றப்பட்டது என்றாலும், திராவிட இயக்கத் தலைவர்களில் பெரியார் தொடங்கிப் பலரும் திருக்குறளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள் என்ற போதிலும் இப்படி அதற்குப் பொருளுரைக்க  முனைந்தது அனேகமாக கலைஞர் மட்டும்தான்.

    திருக்குறளின் கருத்துகளில் தனது மனதைப் பறிகொடுத்த கலைஞர், திருவள்ளுவரை சமகாலத் தமிழ்ச சமூகத்தின் நினைவில் பதிப்பதற்குப் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.  வள்ளுவர் கோட்டமும், குமரிமுனையில் சுனாமியின் சீற்றத்தையும் தாண்டி நெடிதுயர்ந்து நிற்கும் வள்ளுவரின் சிலையும் கலைஞரின் இந்த முயற்சிக்கு அடையாளங்கள்.  சட்டப் பேரவை கூடும்போது ஒவ்வொரு நாளும் குறள் ஒன்றைப் படித்து அதன் உரையையும் எடுத்துரைத்து பேரவைத் தலைவர் அவையைத் துவக்கி வைப்பது வழக்கமாயிருக்கிறது.  எப்போது உட்காரலாம் என எண்ணுகிற உறுப்பினர்களிடையே நுட்பமான ஒருசில செவிகளுக்குள்ளாவது குறளின் கருத்து நுழையாதா என்ற கலைஞருடைய ஆதங்கத்தின் விளைவே இந்த நடைமுறையாக இருக்கக்கூடும்.

    திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள உரையில் மிக முக்கியமாக சுட்டிக் காட்டப்படவேண்டியது பெண்ணிய நோக்கில் பொருளுரைக்கும் முயற்சியாகும்.  அயோத்திதாசப் பண்டிதர் ஆத்திச்சூடிக்கு எழுதியுள்ள உரை இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.  'தையல் சொற்கேளேல்' என்பதற்கு பெண்ணின் வார்த்தைகளைக் கேட்கக் கூடாது என்ற பொருளே பலராலும் கூறப்பட்டு வந்தது.  அதை மாற்றிப் புதிய கோணத்தில் அயோத்திதாசர் அதற்கு விளக்கமளித்திருக்கிறார்.  எதிரியால் உன்னைத் தைக்கக்கூறுமொழிக்கு செவி கொடுப்பாயாயின் கோபம் ஏற்பட்டு அவனுடன் போர்ச் செய்ய நேரும் அதனால் துக்கம் பெருகும்.  எனவே எதிரியின் அந்த மொழிக்கு செவி கொடுக்கவேண்டாம் என்று விளக்கம் அளிக்கிறார் அயோத்திதாசர்.  நமது இலக்கியப் பிரதிகளில் படிந்துள்ள ஆணாதிக்க சிந்தனையை அகற்றும் மிகக் கடினமான பணியின் துவக்கப் புள்ளியாக அயோத்திதாசரின் இந்த முயற்சியைப் பார்க்கலாம்.  அந்த வழியில் கலைஞர் குறளுக்கு விளக்கமளித்துள்ளார்.  பெண் வழிச் சேறல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள 'இல்லாளை அஞ்சுவான்' எனத் தொடங்கும் குறளுக்கு, 'தன் மனையாளுக்கு பயப்படுகிறவன், தான் தேடின பொருளேயானாலும், நல்லவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்கிறதுக்கு எந்நாளும் அஞ்சுவான்' என்று ஜைன உரையில் (சரசுவதி மகால் நூலக வெளியீடு) குறிப்பிட்டுள்ளனர்.  ஆனால் இந்தக் குறளுக்கு இதுவரை கூறப்பட்டுவந்த விளக்கங்களுக்கு நேர் எதிரான விளக்கத்தைக் கலைஞர் கூறுகிறார்.  'எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.' என்று கலைஞர் கூறியுள்ளார்.  பெண்டாட்டிக்கு அஞ்சி நடப்பது குற்றம் என மற்றவர்களெல்லாம் கூறும்போது 'தவறு நேராமல் கண்காணிப்பவள் மனைவி' என்று மனைவிக்கு உயர்ந்த இடத்தை வழங்குவது மட்டுமின்றி அப்படியான மனைவிக்கு அஞ்சி நடப்பது சரியானது என்ற பொருள்பட கலைஞர் உரை எழுதியிருக்கிறார்.   இப்போது பெண்ணியவாதிகள் நமது இலக்கியங்களைஎல்லாம்  முற்போக்கான கோணத்தில் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.  அவர்கள்கூட இதுவரை திருக்குறளுக்கு பெண்ணிய நோக்கில் உரை எழுத முற்படவில்லை.  இந்நிலையில் கலைஞரின் உரை பெண்ணிய நோக்கிலான உரையாகவும் திகழ்கிறது.

    நமது மண விழாக்களில் அதிகம் கூறப்படுகிற குறள் ஒன்று உண்டு.  'தெய்வம் தொழா அள் கொழுநற் றொழு தெழுவாள் பெய்யெனப்  பெய்யும் மழை' என்பதே அந்தக் குறள்.  கணவன் சொல்லைக் கேட்டு நடக்கும் பத்தினிப் பெண், பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று அதற்குப் பொருள் சொல்வதுண்டு.  மழை இல்லாத காலங்களில் அதற்கான காரணங்களைத் தேடுபவர்கள் நமது நாட்டில் பத்தினிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதையும் ஒரு காரணமாகக் கூறுவதை கிராமங்களில் கேட்டிருப்போம்.  அதற்கு இந்தக் குறளுக்கு தரப்பட்டுவந்த விளக்கமே அடிப்படை.  ஆனால் கலைஞர் இந்தக் குறளுக்கு மிகவும் புரட்சிகரமான விளக்கத்தைக் கூறுகிறார்.  'கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்கொள்பவள் ஆவாள்' எனக் கலைஞர் உரை எழுதியுள்ளார்.  கணவனைத் தொழுவதே பத்தினிப் பெண்ணின் இலக்கணமாகக் கூறப்பட்டதை மாற்றி அது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்கிறார் கலைஞர்.

    திருக்குறளைப் போற்றுவதில் பல வகைகள் உண்டு.  அதில் இல்லாதது எதுவுமே இல்லை எனப் பெருமை பேசுவது உண்மையில் திருக்குறளுக்குப் புகழ் சேர்ப்பதாகாது.  அப்படி ஜம்பம் அடிப்பவர்களைப் பற்றி புதுமைப்பித்தன் திருக்குறள் குமரேசப்பிள்ளை என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  புதுமைப்பித்தனின் கூர்மையான விமர்சனத்துக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் சான்றாக இருப்பது அந்தக் கட்டுரை.  திருக்குறளை மலினப்படுத்தும் முயற்சிகளைக் கேலி செய்வதுதான் புதுமைப்பித்தனின் நோக்கம்.  குறளை நிராகரிப்பதல்ல.  ஆனால் இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளின் நிலையோ வேறு.  தமிழே படிக்காமல் இப்போது பட்டதாரி ஆகிவிடலாம் என்பதுபோல பழந்தமிழ் இலக்கியங்களின் வாசனையே இல்லாமல் இப்போது தமிழின் மாபெரும் படைப்பாளியாக வலம் வரலாம்.  தமிழ்ச் சூழலின் அவல நிலைக்கு இது ஒரு அடையாளம்.

    திருக்குறளை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்கக வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.  இன்பத்துப் பாலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்களுக்கு இளையராஜாவைக் கொண்டு இசையமைக்கச் செய்து செல்போன்களின் 'காலர் ட்யூன்களாக ' வழங்கினால் நல்ல வரவேற்பிருக்கும் என்பது என் எண்ணம்.  (அறம், பொருளும் கூட விதிவிலக்கல்ல)  கலைஞர் அவர்கள் இதைப் பரிசீலிக்க வேண்டும்.  நமது சினிமாக் கவிஞர்கள் பாடல் எழுதுவதற்குமுன் கொஞ்சம் குறளைப் புரட்டிப்பார்க்கலாம்.  அதிலிருந்து திருடுவதுகூட தப்பில்லை. நல்ல பாடல்கள் கிடைத்தால் சரிதான்.

    கலைஞர் அரசியல்வாதியாக இருந்து எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார் முதலமைச்சராக இருந்து பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்; பேச்சாளராக இருந்து மறக்க முடியாதபல உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.  ஆனால் அவை எல்லாவற்றையும்விட எழுத்தாளராக இருந்து அவர் தமிழுக்குச் செய்திருக்கும் பணியே மிக முக்கியமானது.  அதில் அவர் எழுதியுள்ள திருக்குறள் உரை குறள் உள்ளளவிற்கும் நிலைத்திருக்கும், தமிழ் உள்ளவரை நினைக்கப்படும். 

    ( 2008 ஆம் ஆண்டு , இந்தியா டுடே இதழின் சார்பில் வெளியிடப்பட்ட கலைஞர் சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை )

Thursday, October 28, 2010

INFITT Response to Extended Tamil Proposal in Unicode Tamil Block



 
As you are aware, International Forum for Information Technology in Tamil (INFITT -http://www.infitt.org) through its Unicode Working Group has worked on several proposals in the past and is working on many proposal to enrich the Tamil Unicode block and offer advise to other Unicode blocks. Several of our members are experts in multiple languages of the world and
technologist who implement Unicode in various IT application areas. Our Members Language knowledge base extends to Tamil, English, Hindi, Telugu, Kannada, Malayalam, Sanskrit, French, Spanish, German, Chinese, Korean, Malayan, Sinhalese, Japanese, Arabic to specify a few.

After carefully reviewing the proposal to encode Characters for Extended Tamil (L2/10-256R)authored by Mr. Shriramana Sharma that proposes to add some new characters to an "Extended Tamil Block" in SMP, proposal L2/10-425 written by Mr. Vinodh Rajan to encode in BMP, INFITT Working Group (WG-02) on Tamil Unicode and the leaders of INFITT concluded that the proposed characters do not belong in a Tamil Script block but perhaps Grantha Indic characters used to write other Indo-Aryan / Dravidian Languages. INFITT has also reached out to various Tamil Department Heads, Vice Chancellors , Tamil Language experts, All have opined that the proposal L2/10-256R, L2/10-425 are grossly misleading and have to be rejected outright. We have also enclosed few samples of the letters received from Tamil Scholars and IT industry experts and Tamils over the world. A list of linguists and technologists who have written to us confirming this fact is also listed at the end of this letter. Should you need copy of all letters, please feel free to drop a note, we will submit all the letters calling for rejections of these two proposals L2/10-256R, L2/10-425 to you.

Continuation to our letter dated September 30 2011 and your acceptance no L2/10-363 and in view of the views expressed by Tamil Scholars and other Indic Scholars, if UTC decides to give representation to these additional characters that are created to support other indic languages,

perhaps UTC can choose to name as below, representing the nature of the character set recommended.
1. Grantha Indic Character
2. Grantha Dravidian Character
3. Grantha South Asian Character
4. Grantha Augmented Character
5. Grantha Linear Character

Unicode Tech committee can choose any of the names to name these new characters in line with purpose they are used for.

We are also pleased inform you that INFITT WG02 working group experts on Unicode are working on the following proposals to further enrich Unicode








1. Adding Archaic Tamil symbols and scripts of Tamil
2.
Encoding the correct canonical forms Tamil Characters in the new Extended Tamil block(11B5 to 11CF, requested in the proposal L2/10-408) and Grantha Characters in the extended Grantha block (11D0 to 11D7 requested in the proposal L2/10-408) in SMP, thus extending wide Unicode Usage to Tamil Publishing Industry, currently crippled with limitations.

Should you need clarifications or assistance feel free to reach me in my cell.

Signed ,
Chair and ED ,INFITT

Jean-Luc Chevillard on Tamil unicode controversy





I would like to add  that one of the weaknesses of INFITT at the moment
is that anybody can become a member of INFITT even if that person does not has any real uptodate technical knowledge.

Any person who pays the fee can become a member of INFITT.

Because of that, debates in the GBINFITT mailing list are often more filled with emotional pleas than with technical arguments.The recent debate concerning the expression "EXTENDED TAMIL"
was a good example.

The people who took part in the debate did not seem to be aware of the fact that similar expressions exist in other geographical domains.

In the case of Europe (and of its  American satellite ;-)
the block called LATIN
was certainly not sufficient,
which is why it had to be supplement by
LATIN-1 SUPPLEMENT
LATIN EXTENDED-A
LATIN EXTENDED-B
LATIN EXTENDED-C
LATIN EXTENDED-D
LATIN EXTENDED ADDITIONAL

Note the technical use of the word EXTENDED

See <http://www.unicode.org/charts/>

The same can be said of CYRILLIC
which is accompanied by
CYRILLIC SUPPLEMENT
CYRILLIC EXTENDED-A
CYRILLIC EXTENDED-B

(see the same charts)

Russian people seem to be quite happy to have their alphabet used for writing other languages

As a member of INFITT since 2003,
I have already publicly voiced the opinion
(in the GBINFITT mailing list)
that the absence of technical selection in the membership of INFITT
(and even in its technical working groups)
is bad for INFITT's credibility and will have bad consequences in the long run
but I seem to be in the minority.

-- Jean-Luc Chevillard





Note: Mr Jean Luc Chevillard is originally belong to the CNRS (French National Center for Scientific
Research) in the linguistics section: special field "HISTORY OF LINGUISTICS".Currently on deputation to the EFEO. His specialization is the history of the Tamil grammatical tradition.He has made a French translation of சேனாவரையம், and written a number of articles on the history of Tamil grammar.He also worked on the தேவாரம். See my column in the forthcoming issue of Uyirmai for more details on him.

சிறுகதை : படுகளம் - லதா

















சண்பகலட்சுமியின் உடலில் சன்னமாகச் சுருதியேறத் தொடங்கியிருந்தது
நாலாபுறமும் மக்கள் இடித்து நெரித்துக்கொண்டிருந்தனர்.
வசதியான இடத்தைப் பிடிப்பதில் ஒவ்வொருவரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
சண்பகலட்சுமி 11 மணிக்கே வந்து மறைப்பில்லாத, வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்து விட்டாள். 
பெரியாச்சி பூசையில் தொடங்கி தர்மராஜா பட்டாபிஷேகம் வரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நடைபெறும் தீமிதித் திருவிழாவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒன்றுவிடாமல் தவறாமல் கலந்துகொள்ளும் சண்பகலட்சுமிக்கு, எந்த விழாவுக்கு எந்த நேரத்தில் வந்தால் இடம் கிடைக்கும், எங்கே நின்றால் வசதியாகப் பார்க்கலாம் என்பதெல்லாம் அத்துப்படி. 
கோயிலில் பல முறை கட்டுமானப்பணிகள் நடைபெற்றிருந்தன. வழமைகளின் கால நேரங்களும் இடங்களும் அவ்வப்போது மாறியிருந்தாலும் அது எல்லாமே சண்பகலட்சுமிக்கு மிகச் சரியாகத் தெரிந்திருந்தது.
கூட்டம் நெருக்க நெருக்க அவளது இடத்தில் காற்றோட்டம் தடைப்படத் தொடங்கியது. 
கிடைத்த சிறு இடைவெளியில் பாதை அமைத்து “முன்னுக்குப் போயி நில்லு” என்று தன் பேத்தியை தள்ளினார் ஒரு மாது.

எப்ப தொடங்குவாங்க.... அருகில் நின்ற சிறுவன் தொணதொணத்தான்.

இரு இரு. பாரு மணல்ல உருவம் எல்லாம் செஞ்சிருக்காங்க. இவங்க யாருன்னு தெரியுமா.. முதல்ல இருக்கிறது அபிமன்யூ. அது யாரு தெரியுமா.... என்று சிறுவனுக்குக் கதை சொல்லத் தொடங்கியிருந்தார் அவனுக்கு அருகில் நின்ற பெரியவர்.

நேரமாக ஆக எல்லாக் குழந்தைகளும் பொறுமையிழக்கத் தொடங்கினர். கூட்டத்தின் நெரிசலுடன் குழந்தைகளின் அழுகையும் நச்சரிப்பும் சண்பகலட்சுமிக்கு எரிச்சலுìட்டியது.
எம் பிள்ளையும் வெளியில வந்து இப்படித்தான் அழுது அடம்பிடிக்குமோ... நினைப்பே அவளைப் பயமுறுத்தியது. வெளிச் சத்தத்தை தன் உடலுக்குள் புகவிடாமல் தடுப்பதுபோல் இரு கைகளையும் பரப்பி வயிற்றைக் கெட்டியாக மூடிக்கொண்டாள். 

அபிமன்யூ அர்ஜுனனின் மகன். சிறந்த வீரன். இன்னிக்கு காலையில சக்கரவர்த்தி கோட்டை பார்த்தயில்ல. அதில செத்துப்போனானே அவன்தான்...

அத்தே... அது என்ன சக்கரவர்த்தி கோட்டை...

மறுபக்கம் நின்ற சிறுமி தன் அத்தையைக் குடைய ஆரம்பித்தாள்.

சக்ரவர்த்தி கோட்டை என்கிறது பாரதப் போரில வரும். சண்ட போடுற முறையில ஒண்ணு. சக்ரவியூகத்துக்குள்ள போன அபிமன்யூ வெளிய வரமுடியாம சிக்கின கதை...

சண்பகலட்சுமியும் எத்தனையோ முறை சக்கரவியூகத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறாள். அவள் பலமுறை பழகிய போர் வியூகம்தான். ஆனாலும் கடைசி நேரத்தில் அவளால் வெளியில் வரமுடியாமல் போய்விடுகிறது. எப்படியும் ஒருமுறையாவது வெற்றிகரமாகத் தப்பி வந்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பாள். ஆனால் முடிவதில்லை. 
எதிரி இருந்தால்தானே அவள் போரிடமுடியும்... அவள் மாட்டிக்கொள்வது எதிரியிடம் இல்லையே... 
ஆமாம்... எதிரியிடம் இல்லைதான்... தனக்குத்தானே சத்தமாகச் சொல்லிக்கொண்டாள். அருகில் நின்றிருந்தவள் ஒரு தரம் சண்பகலட்சுமியைத் திரும்பிப் பார்த்தாள். 
மீண்டும் ஒரு முறை பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி சண்பகலட்சுமியிடம் இருந்தது. 
அவள் மிக நேர்த்தியாகக் கட்டியிருந்த கடுமையான மஞ்சள் நிற காட்டன் புடவை, அவளின் மெருகேறிய கரு நிறத்தையும் தசைகள் கெட்டிப்பட்டு திண்ணென்றிருந்த உடல் வாகையும் மேலும் எடுப்பாகக் காட்டியது. நீளக் கூந்தலை அள்ளிக் கட்டியிருந்தாள். ரோஜாப் பூ ஒன்றையும் வேப்பிலைக் கொத்தையும் செருகியிருந்தாள். தோளில் தொங்கிய சிவப்புத் துணிப் பை அதன் சக்தியையும் மீறிப் புடைத்திருந்தது. சிவப்புக் கற்கள் பதித்த ஜிமிக்கி. இரு கைகளிலும் தங்க வளையல்கள். கழுத்தில் நீளமான உருத்திராட்ச மாலை. 
அந்தப் பெண் மீண்டும் சண்பகலட்சுமியை உற்றுப் பார்த்தாள். அவள் காதில் புளூ டுத்தோ, எயர்போனோ இல்லை. கையிலும் போன் இருப்பதாகத் தெரியவில்லை. பக்கத்தில் நிற்பவரிடம் பேசுகிறாளா என்றும் பார்த்தாள். அதற்கான எந்த அடையாளமும் இல்லை... அருகில் நிற்பவர் தம் குழந்தையோடு பேசிக் கொண்டிருந்தார். மறுபடியும் சண்பகலட்சுமியிடம் பார்வையை ஓட்டினாள். அவள் லேசாகக் கண்களை மூடிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். 
அந்தப் பெண் சற்றுத் தள்ளி நின்றாள்.


அபிமன்யூ தன் அம்மா சுபத்திரை வயித்தில இருக்கும்போது, சுபத்திரையின் அண்ணனான கிருஷ்ணர் ஒருநாள் பொழுதுபோக்கா போர் வியூகங்களைப் பற்றிச் சுபத்திரைக்கு விளக்கினார். சக்ரவியூகம் பற்றியும் அதனுள் இருக்கும் பத்மவியூகம் பற்றியும் கிருஷ்ணர் சொன்னார். சுபத்திரை வயித்துக்குள்ள இருந்து அபிமன்யூவும் அதக் கவனமாகக் கேட்கிறான். சக்ரவியூகத்துக்குள் செல்லும் வழியைக் கூறி, அதிலிருந்து வெளியே வர்ற உத்தியைச் சுபத்திரைக்கு சொல்றதுக்கு முன்னாடி பொழுதுவிடிஞ்சு போச்சு. கிருஷ்ணர் கதையை அத்தோட நிறுத்திட்டார். பாரதப்போரில கௌரவர்கள் படை, அதேபோல் சக்ரவியூகம் அமைத்து, அதுக்குள்ள பத்மவியூகம் உண்டாக்கி, அதில் துரியோதனனை ஒளிச்சு வச்சிட்டாங்க. அந்தச் சமயத்தில அர்ஜுனன் அந்த இடத்தில் இல்லாததால, அங்கிருந்த அபுமன்யூ தானே படைக்குத் தலைமை தாங்கப் போறதாச் சொல்லிக் கிளம்பினான்.....
அத்தை தன் மருமகளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்... 
சிறுமி காலையில் தான் பார்த்த சக்ரவர்த்திக் கோட்டை சடங்கை அசை போடுகிறாள்.... 

அபிமன்யூ சக்ரவியூகத்தைக் காவல் புரியும் நான்கு பூதங்களிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்கிறான். முதல் மூன்று பூதங்களான காளி, காண்டா பூதம், ஏலைய கன்னி ஆகிய பூதங்கள் அபிமன்யூ உள்ளே செல்ல அனுமதி வழங்க மறுக்கிறது. ஆனால், நான்காவது பூதமான கரண்டர் அபிமன்யூ உள்ளே செல்ல அனுமதிக்கிறது. சக்ரவியூகத்தை உடைத்துகொண்டு உள்ளே சென்ற அபிமன்யூவை கௌரவர்கள் படை சுற்றி வளைத்து கொள்கிறது. வெளியே வர வழித்தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த அபிமன்யூ தமக்கு ஆபத்து என்பதைத் தன் தந்தைக்கு தெரிவிக்க தனது சங்கை ஊதுகிறான்..... 
அந்தச் சங்கொலி அர்ஜுனன் காதுக்கு எட்டக்கூடாது என்ற காரணத்தால் கிருஷ்ணர் தனது சங்கை அதைவிட பலமாக ஊதி, அபிமன்யூவின் சங்கொலியை மங்கச் செய்கிறார். அந்தத் தருணத்தில் அபிமன்யூ கொல்லப்படுகிறான். இதுதான் “சக்ரவர்த்தி கோட்டை”.... 
சிறுமியின் நினைவோடலும் அத்தையின் கதையும் முடிகிறது.

தானும் எப்போதாவது இதுபோல் ஒருமுறை கொல்லப்பட்டு விடக்கூடும் என்று நினைத்த சண்பகலட்சுமிக்கு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. லேசாகக் குனிந்து மெதுவாகக் கேட்டாள்.... 
நீ அர்ஜூனனோட பிள்ளையா, கிருஷ்ணனோட பிள்ளையா... துச்சாதனனோட பிள்ளையா... அல்லது அம்மன் கொடியில பறக்கிற ஆஞ்சநேயரோட பிள்ளையா....
அவளுக்குப் பதில் கிடைக்கவில்லை.
இன்னும் கொஞ்சம் குனிந்து, வயிற்றை அழுத்திப் பிடித்தபடி, நான் பேசுறது உன் காதில விழுதா... என்று உரக்கக் கேட்டாள்.

கேட்கும்... கேட்கும்... அருகில் நின்றவர்கள் கெக்கலித்தார்கள்.

சண்பகலட்சுமி காதில் அது விழவில்லை.

ஒருவேள என் குழந்தையும் அபிமன்யூபோல வெளியில் வரத்தெரியாம உள்ளேயே மாட்டிக்கொள்ளுமோ... பெரும் கவலை அவளைக் கனமாகப் போர்த்தியது. மூச்சு முட்டியது. அவள் பதற்றமுற்றாள். வியர்த்துக் கொட்டியது. தன்னைச் சுற்றிய வெளியைப் பெரிதாக்கிக் கொண்டாள்.

என்னம்மா இடிக்கிற... பக்கத்தில ஆளுங்க நிற்கிறது கண்ணுக்குத் தெரியலயா...

சொன்னவள் முறைக்க, சண்பகலட்சுமியின் பதற்றம் மேலும் கூடியது. பல மணி நேரமாகப் பிடித்து வைத்திருந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். வாட்டசாட்டமான அவளின் தோற்றம் அவளுக்குச் சுலபமாக இடம் பிடித்ததுத் தந்தது. துìணோரமாகச் சென்று சாய்ந்து கொண்டாள். மூச்சை இழுத்து விட்டாள். 

ஒரே மாதிரி கருப்பு நிறத்தில் மொட்டைக் கட்டை டீ சட்டையும் பேண்டும் அணிந்திருந்த ஒரு இளையர் கூட்டம் சலசலப்புடன் வந்து மண்டியது. அவர்களின் சிரிப்பிலும் பேச்சிலும் குழந்தைகளின் சிணுங்கல் மறைந்துபோயின.

என்னாலா மண்ணுல உருவம் செஞ்சிருக்காங்க. போமோ செய்யப் போறாங்கலா...

என்னா பேசுற நீனு... இந்த மாதிரி பேசினீன்னா உனக்கு ஏதாவது ஆயிடும்... ஆமா...

ஆமா உனக்கு ரொம்ப தெரியுமாக்கும்...

எனக்குத் தெரியும். நான் சின்னப்பிள்ளையா இருக்கேல்லேர்ந்து பாட்டிகூட வருஷாவருஷம் வருவேன். பாட்டி சொல்லுவாங்க. இதலெல்லாம் சும்மா இல்லை. இந்த திரௌபதி அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தவங்கன்னு. விளையாட்டா நினைச்சு கேலி செஞ்சா அவ்வளவுதான்னு பாட்டி சொல்லியிருக்காங்க....

பெரிசா தெரிஞ்சா மாதிரியே பேசற.. இந்தக் கத என்னான்னு சொல்லுபாப்பம்...

இது தெரியாதாக்கும்... முதல்ல இருக்கிறது அபிமன்யூ. அடுத்து பாண்டவர்களோட குரு, துரோணாச்சாரியார். மூணாவது கர்ணன். அதுக்கடுத்து கொஞ்சம் பெரிசா இருக்கிறது துரியோதனோட தம்பி துச்சாதனன். கடைசி இருக்கிற பெரிய உருவம் துரியோதனன்...

பரவால்ல. பெரிய புலவர்தான்லா நீ. எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க. இந்த பொம்மையைத் தான் பாஞ்சாலி உடைப்பாங்க இல்ல...

யா லா...

யாருலா அந்தப் பாஞ்சாலி.... அசல் ஒம்போது....

பாரு... நீ விளையாடத தெரியுமா. அவர் ஒம்போது இல்ல... ஆம்பிள... அவர்தான் பல வருஷமா பாஞ்சாலி வேஷம் போடுறாரு...

வெரிகுட் ஆக்டிங்லா... இவங்கல நம்ம பிராதனவிழா போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்லா.... 

ஒரு பெரும் சிரிப்பலை வெடித்தது. அருகில் நின்றவர்கள் முறைக்க அந்தக்கூட்டம் அமைதியானது.

வெயில் ஏறி ஏற, உஸ் உஸ் என்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் முணகல்கள் பெருகின. ஆனாலும் ஆர்வத்தோடும் பரபரப்போடும் எல்லாரும் காத்திருந்தார்கள்.

சண்பகலட்சுமியின் கவனம் தன் குழந்தையிடம் திரும்பியது. 
இது எப்போ என்கிட்ட வந்திச்சு... யோசித்து யோசித்து அவளுக்குத் தலை வலித்தது. கடைசியாக திங்கட்கிழமை வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். 
அவளுக்குத் திங்கட்கிழமை என்றால் பிடிக்கும். ஒருமுறை கோயில் ஐயர் அவளிடம் சொன்னார், பாஞ்சாலிக்கு உகந்தநாள் திங்கட்கிழமை என்று. திங்கட்கிழமையில்தான் பாஞ்சாலி வயசுக்கு வந்தாளாம். பாஞ்சாலிக்குக் கல்யாணம் நடந்ததும் திங்கட்கிழமைதானாம். அதனாலதான் ஆடி மாசத் திங்கட்கிழமையில் கொடியேற்றம் நடக்குது என்றும் ஐப்பசி மாசம் திங்கட்கிழமையில தீமிதி நடக்குது என்றும் சொன்னார். அன்று முதல் தான் திங்கட்கிழமை பிறந்திருக்க வேண்டும் என்று சண்பகலட்சுமி தீர்மானித்து விட்டாள். தன் பிள்ளையும் திங்கட்கிழமைதான் பிறக்கும் என்று அவள் நினைத்தாள். ஆனால் எந்தத் திங்கட்கிழமை என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை... 

அங்க பாரு, கிருஷ்ணர் போறாரு... 

தொடங்கப் போகுதுலா... 

பம்பையும் மேளமும் முழங்க குந்தம், மணிப்பலகைகள், மஞ்சள் தட்டு, சாட்டை, தீவிட்டி ஏந்தியவர்களும் வாள் ஏந்திய ஐந்து காவல்காரர்களும் கிருஷ்ணருடன் பெரியாச்சி சன்னதியை அடைந்தனர்.
கிருஷ்ணர், திரௌபதைக்கு மாலை போடுகிறார். 
திரௌபதைக்கு அருள் வருகிறது.

சண்பகலட்சுமி இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள். அவளின் நரம்புகள் புடைக்கத் தொடங்கியிருந்தன. 
எப்போதும் ஆம்பிளங்கதான் வேஷம் போடணுமா... ஏன் பொம்பிளயே பாஞ்சாலியா நடிக்கக்கூடாது... என்ன விட்டா நான செய்ய மாட்டேனா... சண்பகலட்சுமி அன்றும் புழுங்கத் தொடங்கினாள்...
நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே சண்பகலட்சுமிக்கு ஆசை. வகுப்பில் அவள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததால் முதலாம், இரண்டாம் வகுப்புத் தமிழாசிரியருக்கு அவளைப் பிடிக்காது போனது. பிறகு ஆறாம் வகுப்பு தமிழாசிரியருக்கு அவள் மீது அளவுக்குமீறி அன்பு ஏற்பட்டுவிட்டது. அவளுக்கு நாடகம் சொல்லித் தர அவரது வீட்டுக்கு வரச்சொன்னார். ஆனால் அவர் நாடகம் சொல்லித்தரவில்லை. 
பிறகு வானொலி நாடகத்தில் நடிக்க பலமுறை எழுதிப் போட்டாள். நீண்ட நாள் கழித்து ஒரு தயாரிப்பாளர் அவளை நேர்முகத் தேர்வுக்கு வரச்சொன்னார். அவளை நேரில் பார்த்த தயாரிப்பாளர் அவள் கருப்பாகவும் குண்டாகவும் இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பி விட்டார். குரலுக்கும் உடலமைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சண்பகலட்சுமிக்குப் புரியவில்லை. 
வேலைக்குப் போன பிறகு ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தாள். அந்தக் குழுவில் இருந்த பலரும் வசதியானவர்களாக இருந்தார்கள். நாடகத்தைவிட மற்ற அனைத்திலும் அவர்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. அவர்களது ஆடம்பரமான பொழுதுபோக்குகளுக்கு சண்பகலட்சுமியால் ஈடுகொடுக்க முடியவில்லை. அம்மா சிறையில். அப்பா மறுவாழ்வு இல்லத்தில். அக்கா ஓடிப் போய் விட்டாள். அவளும் தம்பியும் மட்டும்தான். தம்பி படித்துக் கொண்டிருந்ததால், முழுப் பொறுப்பும் அவளுக்குத்தான். உயர்நிலைக் கல்வியை முழுமையாக முடிக்காததால் அவளுக்கு நல்ல வேலையும் கிடைக்கவில்லை. மேடை நாடக ஆசையும் அதோடு முடிந்துபோனது. 
ஒரு தீமிதியில் அவள் சாமி வந்து ஆடியதை டிவி செய்தியில் காட்டினார்களாம். பலபேர் பார்த்திருக்கிறார்கள். செய்திக்கு மறுஒளிபரப்பு இல்லாததால் அதையும் அவளால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

கிருஷ்ணர் திரௌபதையின் கழுத்தில் சாட்டை அணிவிக்கிறார். பிறகு திரௌபதையைக் கூட்டிக்கொண்டு திரௌபதை சன்னதிக்குப் போகிறார். திரௌபதை காப்புக் கட்டிக் கொள்கிறாள்.
சாமி புறப்பாடு. 
வீரபத்திரர், கிருஷ்ணர், அர்ஜுனர், திரௌபதை எல்லாரும் படுகளம் நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார்கள்.

படுகளம் தொடங்கி விட்டது.

யார் போட்ட படுகளமா, இது எவர் போட்ட படுகளமா...

பாடிக்கொண்டே சுற்றி வருகிறார்கள்.
பாட்டின் சுதி ஏற ஏற கூட்டத்திலும் கனம் கூடியது. வெய்யில் நெரிசல் புழுக்கம் எல்லாவற்றையும் மீறி கூட்டத்தில் ஒருவித தீவிர உணர்வலை படர்கிறது. 

சொர்க்கமா... நரகமா... 

ஒவ்வொரு உருவமாக கிருஷ்ணர் கேட்டுக்கொண்டே வருகிறார்.

இவன் உன் மகன் அபிமன்யூ...

சொர்க்கம்...

இவர் பாண்டவர்களுக்குப் போர் வித்தை சொல்லிக் கொடுத்த துரோணாச்சாரியார்...

சொர்க்கம் கண்ணா....

இவர் பாண்டவர்களின் மூத்த சகோதரர் கர்ணன்....

சொர்க்கமே கொடு....

இது துச்சாதனன்...

திரௌபதியின் உடலில் வேகம் கூடுகிறது... மண் உருவத்தைக் காலால் உதைக்கிறாள்... 
இவனுக்கு நரகமே கிட்டட்டும்...

சுற்றிலும் பேரமைதி. பம்பையும் மேளமும் ஓங்கி ஒலிக்கிறது... தொண்டர்களின் பதற்றவொலி வேகமாக வெளியில் கேட்கிறது 

இது உன்னைத் தொடையில் அமரச் சொன்ன துரியோதனன்..... கிருஷ்ணன் சொன்னதும் பாஞ்சாலியின் சன்னதம் உச்சம் கொள்கிறது.

கூட்டத்தில் நின்ற பலரும் ஆவேசம் கொள்கின்றனர். கூட இருப்பவருக்கு சாமி இறங்கக்கூடும் என எதிர்பார்த்து வந்திருந்தவர்கள், தயாராக அவர்களை அடக்கும் பணியில் இறங்குகின்றனர். சன்னதம் கொண்டவர்களுக்கு தொண்டர்கள் வீபூதியையும் குங்குமத்தையும் மாறி மாறி அப்புகின்றனர்.

சண்பகலட்சுமி வீறிட்டுக் கத்த, பக்கத்தில் நின்ற இரு தொண்டர்கள் அவளை அடக்க முயற்சி செய்கிறார்கள். அவள் திமிறித் திமிறி ஆடுகிறாள்.

துரியோதனின் உடல் மேல் பாய்கிறாள் திரௌபதை... அவன் ரத்தத்தை அள்ளிப் பூசிக் கொள்கிறாள்... எலும்பை உடைத்துத் தலை சீவுகிறாள்....

அவனுக்கு நரகம்தான் அவனைக் கொல்லு... கத்திக்கொண்டே திமிறுகிறாள் சண்பகலட்சுமி. கூட்டத்தின் கவனம் திசை திரும்புகிறது.

துரியோதணன் வேடத்தில் இருந்தவர் மயக்கமடைகிறார்.

“ஒஹோ... ஹோய்... ஹூய்...” சண்பகலட்சுமி வீறிட்டுக் கத்துகிறாள்

இத யாரு உள்ள விட்டா... வருசா வருசம் இதுகூட ஒரே தொந்துருவாப் போச்சு... அலுத்துக்கொண்டே அவளை அடக்குகிறார்கள் தொண்டர்கள்.

திரௌபதியின் சன்னதம் இன்னும் இறங்கவில்லை. அவள் உடல் ஆடிக்கொண்டே இருக்கிறது. 

உயிர்த்தண்ணி கொடுக்க துரியோதனன் உடலைத் துìக்கிக்கொண்டு தொண்டர்கள் ஓடுகிறார்கள். 

சாமி வந்தவர்கள் ஒவ்வொருவராக மெல்ல அடங்குகிறார்கள். சண்பகலட்சுமியை அடக்க முடியாமல் கூடி நின்றவர்கள் திணறுகிறார்கள்...

திரௌபதை சபதம் முடித்து கூந்தல் முடிந்து கொண்டாள். ஒற்றையாடை நீக்கி செம்பட்டு அணிந்துகொண்டாள். அவள் கையில் வாள் கொடுக்கிறார்கள்.

சண்பகலட்சுமியின் கொண்டை அவிழ்ந்து நீளமான செந்நிற சுருட்டை முடி தீ போல் எரிந்தது. 

உன்னை வெட்டாம அடங்க மாட்டேன்டா....

யார வெட்டப் போற.... சொல்லு.... கை நிறைய குங்குமத்தை அள்ளிக்கொண்டு கர்ணகடூரமாகக் கேட்கிறார் அவளுடன் போராடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர்.

உன்னத்தாண்டா... உன்னைத்தாண்டா... அவள் எல்லார் முகத்திலுக் காறி உமிழ்கிறாள்....

சுற்றி நின்றவர்கள் ஆத்திரம் தாங்காமல் அவள் மேல் வாளி வாளியாக மஞ்சள் நீரைக் கொட்டுகிறார்கள்.

திரௌபதை வாள் கொண்டு தீக்குழிக்கு அடி அளக்கிறாள். நான்கு மூலையும் வரைந்து, திரௌபதை சூலத்தை அகற்ற கூட்டம் மெல்லக் கலைகிறது.

நாகஸ்வரம் மேளத்துடன் பூசை தொடங்குகிறது.

முகம் முழுக்க குங்குமமும் மஞ்சள் நீருமாக அந்த வெயியில் எரிந்துகொண்டிருந்த சண்பகலட்சுமியை மறந்து விட்டிருந்தார்கள்.

பாவிப்பயலுக. குடிக்கத் தண்ணி கேட்டா, தலையில கொட்டிட்டுப் போயிடானுங்க...

சண்பகலட்சிக்கும் உள்ளுக்குள்ளும் எரியத் தொடங்கியது.

ஏய் அந்தத் தண்ணியைக் கொண்டா...

அவளின் கடூரமான குரலில் நடுங்கிப்போன அந்தப் பெண் எட்டி நின்றவாறு கையிலிருந்த தண்ணி போத்தலை அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்...

ஒருபோத்தல் தண்ணியையும் ஒரே மடக்கில் குடித்தாள். கொஞ்சம் பசி அடங்கியதுபோலிருந்தது.

ரெண்டு பேருக்கு நரகமாம்... மூணு பேருக்கு சொர்க்கமாம்.... என்னா நியாயம் இது... போருன்னா போர்தான்... எல்லாரும் கொன்னாங்க... எல்லாரும் செத்தாங்க... எல்லாரையும் ஒரே இடத்துக்குதான அனுப்பனும்... அது எப்படி ஒருத்தங்கல நரகத்துக்கும் ஒருத்தங்கல சொர்க்கத்துக்கும் அனுப்ப முடியும்.... அது என்னா நியாயம்....

அவளுக்கு பைத்தியம் முற்றி விட்டதாக அங்கு நின்றவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

சண்பகலட்சுமிக்குத் தீக்குழி வெட்டுவதையும் தீ மூட்டுவதையும் பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது.

ஒரு முறையாவது தானும் ஆம்பிளபோல் வேஷம் போட்டுத் தீக்குழிக்குள் இறங்கிப் பார்க்கவேண்டும் என்று அவள் எப்போதும் நினைத்துக்கொள்வாள்.
ஆனால் பொம்பிள எப்படி ஆம்பிள போல வேஷம் போடமுடியும்... ஆம்பிளன்னா ரொம்ப ஈஸ¬யா பொம்பிளையா மாறிடலாம். ஆனா அவள் எப்படி ஆம்பிளையாவது... எப்படி மஞ்சள் வேட்டியைக் கட்டிக் கொண்டு மேலாடையில்லாமல் வருவது.... சே...
பெண் போல் வேடமிட்டு உலா வந்த தன் கணவனை நினைத்துக்கொண்டாள். அவன் ஏன் பெண் வேடம் போடுவதன் காரணம் அவளுக்கு பல நாட்கள் புரியாமலே இருந்தது. அவன் ஏதோ நாடகத்தில் நடிக்கிறான் என்றுதான் முதலில் நினைத்தாள். ஆனால் எப்போதுமே நாடகம் நடக்காதே என்றும் யோசித்தாள். ஒருநாள் ஆண் தோழன் ஒருவனை வீட்டுக்குக் கூட்டி வந்து, இனிமேல் இந்த வீட்டில் இவன்தான் இருப்பான், நீ வெளியே போ என்றான். அவள் முடியாது என்றாள். என்னா ரொம்ப திமிறா பேசற... வந்தவன் மிரட்டினான். அவளுக்கு ஆத்திரம் வந்தது. இந்த வீட்டில என்னோட சிபிஎப்பும் இருக்கு. என்ன வெளில போகச் சொல்ல நீ யாரு... அவள் கத்தினாள். அவன் அடித்தான். அவளும் அடித்தாள். அடிதடி ரத்தக் களறியானது. அவள் போட்டிருந்த டீ சட்டைக் கிழித்தெறிந்தான். அவமானமும் கோபமும் தாங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தன் கணவன் மீது கத்தியை வீசினாள். அந்த ஆத்திரத்தில் புதிதாக வந்தவன் அவளைப் பலாத்காரம் செய்தான்... ரத்தக் களறியில் ஒரு அத்தியாயம் முடிந்தது... இன்னொன்று தொடங்கியது...

தீமிதிக்காக புது மணல் கொண்டு வந்து கொட்டியிருந்தார்கள். இதன் மேல் தீக்குழி வெட்டுவார்கள். 
தீக்கட்டைகள் குவிந்து இருந்தன. திரௌபதை அளந்த இடத்தில் 18 அடி நீளத்துக்கு வெட்டப்படுகிறது. 

அவளும் தெள்ளத்தெளிவான சுத்தமான மணலாகத்தான் இருக்கிறாள்.

அவள் மேல் சன்னதம் ஏற்படுத்திக் கோடு கிழிக்கிறார்கள்... அவளைச் சுத்தமாக்க மஞ்சளைக் கரைத்துக் கொட்டுகிறார்கள்... ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று பகுதிகளாக தீக்கட்டைகளை அடுக்கிறார்கள்... ஹோமத் தீயை எடுத்து வந்து தீ மூட்டுகிறார் தலைமைப் பண்டாரம்... மூன்று பகுதிகளிலும் எரிந்த தீ, ஒரு பெரும் தீயாகி, கொளுந்து விட்டு எரிகிறது. எரிந்து எரிந்து கட்டைகள் கருகி, அவிந்து தணலாகிறது.... தணல் சமன்படுத்தப்படுகிறது... பூசணிக்காய் உடைத்து காவல் கொடுக்கிறார்கள்... பூத் துìவி வழிபடுகிறார்கள்... பூக்குழி தயாராகிறது...
விரதம் இருந்து மஞ்சள் நீராடி ஒற்றைத் துணியுடுத்தி தணல் மேல் நடக்க ஆண்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்...
தலைமைப் பண்டாரம் வந்து விட்டார்... அவர் கரகம் சுமந்து ஆடுவது, திருமணமான நாளன்று குட்டையான கவுனைப் போட்டுக் கொண்டு அவளது கணவன் ஆடியதை ஞாபகப்படுத்தியது. அன்றைக்கு அவளும் அவனுடன் சேர்ந்து ஆடினாள்.
பண்டாரம் முதலடி வைத்து நடந்ததும் ஒவ்வொருவராக இறங்குகிறார்கள்... 
வரிசையாக நடக்கிறார்கள்... நீறு பூக்காமல் தணலைக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள்... பலர் ஓடுகிறார்கள்... பட்டும் படாமலும் சிலர் தாவுகிறார்கள்... 
தீயில் நடந்தவர்கள் மிதித்து மிதித்து தெறித்த பால் அவளை முழுதாக நனைத்திருந்தது 
தீ தணிந்து சாம்பல் சூடும் தணியும்போது அவள் தனித்துப் போயிருந்தாள்....

அவள்மீது புல்முளைக்கிறது. 
புறாக்களுக்கு அரிசி வீசிக்கொண்டு வெறுமனே இருக்கிறாள். மறுபடியும் அவளை உழுகிறார்கள்..... மணலாகிறாள்... குழி வெட்டுகிறார்கள்... தீ மூட்டுகிறார்கள்...

பூக்குழி கணல்கிறது. சந்தனக்கட்டைகள் எரிந்து அணைந்து தணலாகும் வரை நேற்றிலிருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள் சண்பகலட்சுமி. 
தீயின் சூட்டில் நெற்றியில் அப்பப்பட்டிருந்த குங்குமம் கரைந்து ஓடி அவளது மஞ்சள் சேலை சிவப்பு நிறமாகியிருந்தது.
பூக்குழி சுற்றுபவர்கள் வரிசையில் நிற்கும் அவளுக்கு முன்னும் பின்னும் இடம் விட்டே நிற்கிறார்கள்.

அவள் மீது ஒவ்வொருவராக நடந்து செல்கிறார்கள்.

கனத்த குரலில் உரத்துப் பாடிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 
வேகமான தாளத்துடன் பாடல் ஓங்கி ஒலித்தது.
சண்பகலட்சுமியும் பாடத் தொடங்கினாள்.
அவள் கையிலிருந்த எலுமிச்சம்பழம் மசிந்து வழிந்தது. 
அவள் உடலும் கரையத் தொடங்கியது. 
தீக்குழியைச் சுற்றிலும் செங்குருதி பரவி விரவியது. 
பசும்பால் கலந்திருந்த வெண்மணல் செம்மண் ஆகிறது...

கைநிறைய வேப்பிலையும் எலுமிச்சம்பழமும் வைத்திருந்த ஒருத்தி தீட்டு தீட்டு என்று கத்தினாள்.. அவள் குரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது... 

தணிந்திருந்த தணல் திடீரென பற்றி எரியத் தொடங்கியது... நெருப்பின் நடுவே சண்பகலட்சுமியின் பாடல் உரத்து ஒலிக்கிறது...

அருள் வந்து ஆடிக்கொண்டிருந்தவர்களின் ஆட்டம் சட்டென அடங்கியது. 
தீக்குளித்திருந்த ஆண்கள், பூக்குழி சுற்ற வரிசைபிடித்திருந்த பெண்கள், காவலுக்கு நின்றவர்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாருமே விதிர்த்துப் போயினர். 
கோயில் பூசாரிகளுக்கு வியர்த்துக் கொட்டியது... அங்கு நின்றிருந்த அவசர மருத்துவ சேவைத் தாதியர்களும் போலிஸ்காரர்களும் செய்வதறியாது நிற்க... சடசடவென்று மழை கொட்டத் தொடங்கியது.